அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தை நடைபெற கூடிய இடம் மற்றும் நாள் உள்ளிட்ட விவரங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஜெனீவா நகரில் எதிர்வரும் 26-ஆம் திகதி பேச்சுவார்த்தை நடைபெறும் என ஓமன் வெளியுறவு துறை அமைச்சர் பத்ர அல் புசைதி உறுதிப்படுத்தி உள்ளார்.
இதுபற்றி அவர் எக்ஸ் கணக்கில் வெளியிட்டு உள்ள செய்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தையானது எதிர்வரும் வியாழக்கிழமை ஜெனீவாவில் நடைபெற உள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்றும் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கான நடவடிக்கையை நோக்கி அது நகரும் என அவர் தெரிவித்து உள்ளார்.
















