இலங்கை தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி திமுத் பாஷித அதபத்து (Dimuth Bhashitha Atapattu) நியமிக்கப்பட்டுள்ளார்.
தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதையும், நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதையும் நோக்காகக் கொண்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவமிக்க இவர், தற்போது இலங்கை CERT (Computer Emergency Readiness Team) மற்றும் LK டொமைன் ஆகியவற்றின் பணிப்பாளர் சபையிலும் அங்கத்துவம் வகிக்கின்றார்.
இந்த நியமனம் 2026 மார்ச் 05 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.













