அழிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பாமாயிலை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சுங்கத்துறை கண்காணிப்பாளர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உணவு மற்றும் மருந்து ஆய்வாளரால் மனித நுகர்வுக்குத் தகுதியற்றவை எனக் கருதப்பட்ட ஐந்து பாமாயில் கொள்கலன்கள், சுங்கச் சட்டத்தின் 109 ஆவது பிரிவின் கீழ் அழிக்க உத்தரவிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இருப்பினும், சந்தேக நபர் அந்தக் கொள்கலன்களை ஒரு தனியார் இடத்திற்கு எடுத்துச் சென்று, ஒரு கொள்கலனில் இருந்த இந்த எண்ணெயை சுமார் 4 மில்லியன் ரூபாய்க்கு விற்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவர், அசல் பதிவுகளைத் தன்னிடமே வைத்துக்கொண்டு, கையிருப்பு அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறி ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார்.
இந்த நிலையில் கைதான பிலியந்தலை, சித்தமுல்ல பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.












