கால்நடை மருத்துவர்களிடமிருந்து பெறப்படும் எழுத்துப்பூர்வ மருந்துச் சீட்டுக் கட்டணத்தின் அதிகபட்ச விலை 21 பவுண்ட்ஸுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், கால்நடை மருத்துவமனைகள் இந்த சேவைகளுக்கான விலைப்பட்டியல்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் இங்கிலாந்தின் போட்டி மற்றும் சந்தை ஆணையகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பணவீக்க விகிதத்தை விட சுமார் இரு மடங்கு வேகத்தில் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளின் மருத்துவ சேவை விலைகள் உயர்ந்து வந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சீர்திருத்தங்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அமலுக்கு வரத் தொடங்கும் என்று போட்டி மற்றும் சந்தை ஆணையகம் மேலும் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் மருந்துச் சீட்டுக் கட்டணங்கள் தற்போது வரம்பற்றவையாக உள்ளது.
ஆனால், இந்த சீர்திருத்தங்களின் கீழ் முதல் மருந்துக்கு 21 பவுண்ட்ஸ்களாகவும், மேதிலக மருந்துகளுக்கு 12.50 பவுண்ட்ஸ்களாகவும் விலை வரம்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து குடும்பங்களில் சுமார் 60% பேர் செல்லப்பிராணிகளை வளர்க்கின்றனர்.
மேலும் கால்நடை மருத்துவத் துறையின் பெறுமதி 6.7 பவுண்ட்ஸ் பில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாகவும் ஆணையகம் கூறுகிறது.
















