பெப்ரவரி 16 ஆம் திகதி காங்கேசன்துறை கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைதான 25 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்களின் வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில் இன்று மீண்டும் வழக்கு இடம்பெற்றது.யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரிகளால் 25 மீனவர்களும் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது மீனவர்களின் விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.
தமிழகம் காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.














