2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (03) சென்னையில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளினால் வீழ்த்தி வெற்றி பெற்றது.
போட்டியில் 210 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கினை துத்திரய பஞ்சாப் அணி ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் நேஹல் வதேராவுடன் நான்காவது விக்கெட்டுக்கு அமைத்த 59 ஓட்டங்கள் கூட்டணியின் உதவியால் எட்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் 210 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
இது நடப்பு ஐ.பி.எல். சீசனில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி பெற்றுக் கொண்ட இரண்டாவது வெற்றியாகும்.
அதேநேரம், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி பெற்றுக் கொண்ட இரண்டாவது தோல்வியும் ஆகும்.
சென்னை சிதம்பரம் மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதற்கு தீர்மானித்தது.
அதற்கு அமைவாக முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிறப்பாக விளையாடி 5 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டங்களை குவித்தது.
சென்னை அணி சார்பில் இளம் வீரர் ஆயுஷ் மத்ரே 43 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களை அதிகபடியாக எடுத்தார்.
அவர் தவிர, சிவம் டூபே 45 ஓட்டங்களையும், சர்பராஸ் கான் 32 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்து தங்களது பங்களிப்பினை அணிக்கு வழங்கியிருந்தனர்.
பின்னர், 210 என்ற ஓட்டத்தை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கினை அடைந்தது.
பஞ்சாப் அணி சார்பில் அதிகடியாக ஸ்ரேயாஸ் அய்யர் 29 பந்துகளில் 50 ஓட்டங்களையும், பிரப்சிம்ரன் சிங் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்த வெற்றியுடன் பஞ்சாப் அணியானது புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது, அதேநேரம் சென்னை அணியானது இறுதி இடத்துக்கு சென்றமையும் குறிப்பிடத்தக்கது.












