கலைப்புலி தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அரசன். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுள்ள நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரசன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது..
ஐசரி கணேஷ் தயாரிப்பில் மூன்று படங்கள் நடிப்பதாக சொல்லி சிம்பு அட்வான்ஸ் வாங்கினார்.. ஆனால் வெந்து தணிந்தது காடு படத்தில் மட்டுமே நடித்தார். இரண்டாவது படத்தின் வேலைகள் தொடங்கி செட் எல்லாம் அமைக்கப்பட்ட நிலையில் அப்படத்தில் சிம்பு நடிக்கவில்லை.. இதனால் ஐசரி கணேசனுக்கு 10 கோடிக்கு மேல் நஷ்டம்.. எனவே அந்த பணத்தை சிம்பு கொடுக்க வேண்டும் என ஐசரி கணேஷ் சொல்கிறார். ஆனால் சிம்புவோ நான் மூன்று கோடிதான் கொடுப்பேன்.. 5 கோடிதான் கொடுப்பேன் என சொல்வதால் இந்த நடவடிக்கையை ஐசரி கணேஷ் எடுத்து விட்டார்..
இந்நிலையில், இதற்கு சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். வெந்து தணிந்தது காடு படத்தின் போது தொடரப்பட்ட வழக்கை வைத்துக்கொண்டு அரசன் படபடப்பை நிறுத்திவிட்டதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்..
மேலும் ‘சிலம்பரசன் சட்டப்படி நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்ற வழக்கு அது. வெந்து தணிந்தது காடு படத்திற்கு பின் இரண்டாவது படத்திற்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் சிலம்பரசனுக்கே சொந்தம் என்ன நீதிமன்றமே தீர்ப்பு சொல்லிவிட்டது. அப்படியிருந்தும் எப்படி படத்தை நிறுத்தினார்கள்? பழைய வழக்கை எடுத்துக்கொண்டு இதை செய்திருக்கிறார்கள்..
நான் ஒன்றே ஒன்றுதான் கேட்க விரும்புகிறேன்.. ஒரு தயாரிப்பாளருக்காக போராடுவதற்காக தமிழ் பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாலர் சங்கம் நிற்கிற போது ஒரு நடிகருக்காக போராடுவதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நிற்கதா?.. அவர்களும் போராட வேண்டும்.. உரிமை பெற்று தர வேண்டும்’ என்று அவர் கூறியிருக்கிறார். விரைவில் இது தொடர்பாக டி.ஆர் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது..
















