எதிர்பாராத கணினி அமைப்பு கோளாறினால் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் இன்று (17) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் செயலிழப்பால் ஏற்பட்ட இடையூறினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போது அது சரிசெய்யப்பட்டு வருகிறது.
இதன் விளைவாக, தலைமை அலுவலகத்தில் உள்ள ஒரு நாள் அடையாள அட்டை வழங்கும் வசதி மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களின் செயல்பாடுகள் உட்பட அனைத்து சேவைகளும் இன்று கிடைக்காது என்றும் ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது.













