கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து வரும் பணம் 26.5% அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகளை மேற்கொள்காட்டி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
2025-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 1.815 மில்லியன் டொலர்கள் புலம்பெயர் தொழிலாளர்களின் மூலமாக நாட்டுக்கு அனுப்பப்பட்டடுள்ளது.
அதுவே, 2026-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 2.294 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தரவுகளின்படி, மாதாந்திர வரவுகள் ஜனவரியில் 751 மில்லியன் டொலர்களாகவும், பெப்ரவரியில் 729 மில்லியன் டொலர்களாகவும், மார்ச்சில் 815 மில்லியன் டொலர்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேம்பட்ட நிதி நம்பிக்கை மற்றும் அதிகாரிகளால் ஊக்குவிக்கப்பட்ட முறையான பணப் பரிமாற்ற வழிகளின் அதிகப்படியான பயன்பாடு ஆகியவற்றால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டதாக இலங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்தது.














