வட அயர்லாந்தின் தெற்கு பெல்ஃபாஸ்டில் உள்ள பாடசாலை ஒன்றில் வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றிய வில்லியம் லாயிட்-லேவரி (William Lloyd-Lavery) என்பவர், மாணவிகளுக்கு இழைத்த பாலியல் அநீதிக்காகச் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 1970-களில் ரிச்மண்ட் லாட்ஜ் பாடசாலையில் (Richmond Lodge School) லாயிட்-லேவரி ஆசிரியராக இருந்தபோது, சுமார் 13 வயதுடைய நான்கு மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்து 50 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலுடன் முன்வந்து அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
வில்லியம் லாயிட்-லேவரி தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வந்த போதிலும், ஆறு வெவ்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.













