மேற்கு வங்கத்தில் 142 தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.
ஏப்ரல் 23ஆம் திகதி முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதில் மொத்தமாக 93.2% வாக்குகள் பதிவாகியது.
இதேவேளை, 2ஆம் கட்ட தேர்தலில் 3.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
அதற்கேற்ப 41 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுவருகின்றன.
இதன்படி, பிற்பகல் 1 மணி நிலவரப்படி மேற்கு வங்க மாநிலத்தில் ஹூக்ளி மாவட்டத்தில் அதிகபட்சமாக 64.57 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
குறைந்தபட்சமாக ஹவுரா மாவட்டத்தில் 60.69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
மதியம் 1 மணி நிலவரப்படி 61.11% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.














