பிரிட்டன் மன்னர் King Charles III தனது ஆட்சிக்காலத்தின் முதல் வெளிநாட்டு பிரிட்டிஷ் ஆட்சி பகுதியாக Bermuda தீவுக்குச் சிறப்பு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம், அவர் சமீபத்தில் மேற்கொண்ட United States நாட்டிற்கான நான்கு நாள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்திற்குப் பிறகு நடைபெற்றது.
மன்னர், தனது துணைவியார் Queen Camilla இல்லாமல் தனிப்பட்ட முறையில் இந்த பயணத்தை மேற்கொண்டார்.
இந்த பயணத்தின் முதல் நாளில், மன்னர் பல முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார். குறிப்பாக, பெர்முடா தேசிய ( National Museum of Bermuda ) அருங்காட்சியகத்தில் அட்லாண்டிக் கடல் அடிமை வர்த்தகத்துடன் தொடர்புடைய வரலாற்றுப் பொருட்களை பார்வையிட்டார்.
அங்கு அடிமை கப்பலில் கட்டப்பட்டிருந்த மனிதர்களின் படங்கள் மற்றும் அடிமைகளுக்கு பயன்படுத்தப்பட்ட இரும்புக் கட்டுகள் போன்ற பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இது அந்த நாள் நிகழ்வுகளில் மிகுந்த உணர்ச்சி மிகுந்த தருணமாகக் கருதப்பட்டது.
மேலும், மன்னர் கடலோர காவல்படையுடன் படகு பயணமும் மேற்கொண்டார். பின்னர், ஒரு அக்வேரியத்தில் நடைபெற்ற கேக் வெட்டும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
அதே நேரத்தில், பெர்முடாவின் பாரம்பரியமான கோம்பே (Gombey) நடன நிகழ்ச்சியையும் அவர் கண்டுகளித்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, கோம்பே நடனக் குழுவின் பேச்சாளர் இர்வின் ட்ராட், (Irwin Trott) ‘இந்த நடனம் ஆப்ரிக்க, கரீபியன், மேற்கிந்திய, அமெரிக்க பூர்வீக மற்றும் பிரிட்டிஷ் கலாச்சாரங்களின் கலவையாகும்’ என்று மன்னரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த பயணம், மன்னரின் ஆட்சிக்காலத்தில் முக்கியமான கலாச்சார மற்றும் வரலாற்று பரிமாற்றமாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது















