குடிவரவு மீறல்கள் முதல் இணையவழிக் குற்றங்கள் வரையிலான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, 2026 ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் 628 வெளிநாட்டுப் பிரஜைகளை இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு.வுட்லரின் கருத்துப்படி,
இந்தியா, வியட்நாம், சீனா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியாவைச் சேர்ந்த சந்தேக நபர்கள், கறுவாத்தோட்டம், கல்கிஸை, பொத்தல, சிலாபம் மற்றும் கொஸ்வத்தை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்களில் பலர் வாடகை வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து செயல்பட்டு வந்துள்ளனர்.
மேலும், சட்டவிரோத நோக்கங்களுக்காக வளாகங்கள் பயன்படுத்தப்பட்டால், சொத்து உரிமையாளர்களும் சட்டரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், வீட்டு உரிமையாளர்களைப் பொறுப்பிலிருந்து பாதுகாக்கவும் விழிப்புணர்வு அவசியம்.
வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வாடகைக்கு விடும்போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.














