பிரிட்டன் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில், பிரதமர் Keir Starmer மீது தனது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. அரசியல் ஆய்வாளர் ரிக்பி வெளியிட்ட தகவலின்படி, “விளையாட்டு முடிந்துவிட்டது” என்று சில அமைச்சர்கள் பிரதமரிடம் நேரடியாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆட்சியின் எதிர்காலம் குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.
அதே நேரத்தில், வீடமைப்பு செயலாளர் Steve Reed மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் ஓய்வூதிய செயலாளர் Pat McFadden ஆகியோர், ஸ்டார்மர் பதவி விலகாமல் தொடர்ந்து போராட வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் பிரதமரின் நெருங்கிய கூட்டாளிகளாக கருதப்படுகின்றனர்.
மேலும், வெளிவிவகார செயலாளர் Yvette Cooper மற்றும் பாதுகாப்பு செயலாளர் John Healey ஆகியோர் திங்கள்கிழமை இரவு பிரதமருடன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பிரதமர் பதவி விலக வேண்டிய காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ய்வெட் கூப்பர் இணங்கவில்லை என கூறப்படுகிறது.
இதேவேளை, துணைப் பிரதமர் David Lammy மற்றும் நாடாளுமன்ற செயலாளர் Jonathan Reynolds ஆகியோரும் பிரதமருடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
இந்த அரசியல் நெருக்கடியின் மத்தியில், திங்கள்கிழமை மட்டும் நான்கு இளநிலை அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். மேலும், ஸ்டார்மர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரும் லேபர் கட்சி எம்.பிக்களின் எண்ணிக்கை தற்போது 73 ஆக உயர்ந்துள்ளது.
















