பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு வழக்கில், கோடீஸ்வர இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மீதான குற்றவியல் மோசடிக் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுவதாக அமெரிக்க நீதித்துறை திங்களன்று (18) அறிவித்தது.
ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டொலர் வரை இலஞ்சம் கொடுத்ததாகவும், இந்தியாவில் ஒரு சூரிய ஆற்றல் திட்டத்தைப் பெறுவதற்காக அமெரிக்க முதலீட்டாளர்களிடம் பொய் சொன்னதாகவும் குற்றம் சாட்டப்பட்டு இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை கௌதம் அதானியின் நிறுவனம் நீண்ட காலமாக மறுத்து வருகிறது.
இந்த நிலையில் அதானி அமெரிக்காவில் 10 பில்லியன் டொலர் முதலீடு செய்வதாக உறுதியளித்ததை அடுத்து, அமெரிக்க நீதித்துறை அந்த வழக்கைக் கைவிட்டது.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ் நீதித்துறையால் முதலில் தொடரப்பட்ட இந்த வழக்கில், அமெரிக்க முதலீட்டாளர்களின் நலனுக்குப் பாதகமாக, சூரிய ஆற்றல் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக அதானி அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.












