உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 04.50 மணிக்கு ஒரு அமெரிக்க விமானப்படைத் தளத்தைத் தாக்கியதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், தாக்குதலுக்குள்ளான அந்த தளம் எங்குள்ளது என்பதை ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை கூறவில்லை.
பந்தர் அப்பாஸ் விமான நிலையத்திற்கு அருகே வியாழக்கிழமை அதிகாலையில் அமெரிக்க தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.














