நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மகன், இரண்டு பாலியல் பலாத்காரக் குற்றங்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஓஸ்லோ நீதிமன்றம் திங்களன்று (15) தீர்ப்பளித்தது.
மரியஸ் போர்க் ஹோய்பி தான் (Marius Borg Hoiby) குற்றமற்றவர் என வாதிட்டார்.
மேலும் அவர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.
29 வயதான இவர், நோர்வேயின் பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட், பட்டத்து இளவரசர் ஹாக்கனைத் திருமணம் செய்வதற்கு முன்பு, அவருக்கு இருந்த முந்தைய உறவின் மூலம் பிறந்த மகன் ஆவார்.
அவர் மீது சுமத்தப்பட்ட நான்கு பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளில் இரண்டில் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, மற்ற இரண்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
2018 மற்றும் 2024-க்கு இடையில், உறங்கிக்கொண்டிருந்த அல்லது வேறுவிதமாக சுயநினைவு இன்றி இருந்த நான்கு பெண்களைப் பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்ததாக ஹோய்பி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்போது போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் தடையுத்தரவை மீறியது உள்ளிட்ட சிறிய குற்றங்களுக்காகவும் அவர் மீது பிற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஹோய்பி பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுகளை மறுத்தபோதிலும், பல சிறிய குற்றங்களை ஒப்புக்கொண்டார்.














