நாளை (24) பல பகுதிகளில் 24 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
லபுகம மற்றும் களதுவாவிலிருந்து மஹரகம வரையிலான பிரதான நீர் விநியோகக் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கலகெதர, ஹோமாகம, கொட்டாவ, பன்னிபிட்டிய, பெலன்வத்தை மற்றும் மஹரகம ஆகிய பகுதிகள் இதனால் பாதிக்கப்படும்.
குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கான நீர் விநியோகம் நாளை (24) மாலை 6.00 மணி முதல் ஜூன் 25 ஆம் திகதி மாலை 6.00 மணி வரை நிறுத்தப்படும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்வோர், பராமரிப்புப் பணிகளின் போது தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.















