• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் நூற்றாண்டு விழா

களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் நூற்றாண்டு விழா

Hanushya P by Hanushya P
2026/07/02
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்கால சுகாதாரச் சவால்களை வெற்றிகொள்வதற்கு, மாற்றம் அடைந்து வரும் தேவைகளுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக்கொள்ளத்தக்க திறமைமிக்க சுகாதாரப் பணியாளர் குழாமை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறையின் மிக முக்கியமான தேசிய பயிற்சி நிறுவனமாகிய களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனத்தின்  நூற்றாண்டு விழாவை (1926–2026) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நூற்றாண்டு விழா மாநாட்டை, நேற்று (01) களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவன கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

blank

நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதில் இந்த நிறுவனம் ஒரு நூற்றாண்டு காலமாக ஆற்றி வரும் மகத்தான சேவையைப் பாராட்டிய பிரதமர், தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் நூற்றாண்டு விழா என்பது இலங்கையின் பொதுச் சுகாதார வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கலாகும் என்றும் நாட்டின் பொதுச் சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவதிலும், நோய் தடுப்பு சுகாதார சேவைகளை மேம்படுத்துவதிலும் ஒரு நூற்றாண்டு காலமாக இந்த நிறுவனம் ஆற்றிய பணிக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமே இதுவாகும் என்றும் தெரிவித்தார்.

தாய் மற்றும் சேய் நலம், நோய்த்தடுப்புத் திட்டங்கள், நோய்த்தடுப்பு போன்ற துறைகளில் இலங்கை அடைந்துள்ள வெற்றிகள், பலமான பொதுச் சுகாதார நிறுவனங்கள் மற்றும் சுகாதார வல்லுநர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றன என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.

அத்துடன் முதுமை அடையும் சனத்தொகை, தொற்றா நோய்களின் பரவல் மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் புதிய சுகாதார அனர்த்தங்களை வெற்றிகொள்வதற்கு, மாற்றம் அடைந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப மாற்றமடையக்கூடிய திறமையான சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

நவீன சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள், ஆரம்ப சுகாதார சேவைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் அரசாங்கம் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோர் விசேட உரைகளை நிகழ்த்தியதுடன், வைத்தியர் துஷார பெர்னாண்டோ ‘NIHS – Past, Present and Future”‘ எனும் தலைப்பில் முதன்மை உரையை நிகழ்த்தினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில் “NIHS – 100 Years  ஞாபகார்த்த நூல் வெளியீடும் நூற்றாண்டு விழா ஞாபகார்த்த அஞ்சல் முத்திரை ஆகியனவும் வெளியிட்டு வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் நாடாளுமன்றஉறுப்பினர் வைத்தியர் நிஹால் அபேசிங்க, தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள், பங்காளி நிறுவனங்களின் பிரதிநிதிகள், கல்விமான்கள், சுகாதார வல்லுநர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பெருமளவிலான அழைக்கப்பட்ட அதிதிகள் கலந்துகொண்டனர்.

Related

Tags: greater attentionovercome future healthPrime Minister Dr. Harini Amarasooriyaworkforce
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர சிஐடியில் முன்னிலை!

Related Posts

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர சிஐடியில் முன்னிலை!
இலங்கை

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர சிஐடியில் முன்னிலை!

2026-07-02
மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா
இலங்கை

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா

2026-07-02
53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!
இலங்கை

விபத்துகளால் அன்றாடம் சுமார் 30 பேர் உயிரிழப்பு!

2026-07-02
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!
இலங்கை

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

2026-07-02
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!
இலங்கை

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

2026-07-02
இலங்கை

பணம் கொடுத்து அதிதியாக செல்லும் கலாசாரத்தை அனுமதிக்கக் கூடாது

2026-07-02

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர சிஐடியில் முன்னிலை!

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர சிஐடியில் முன்னிலை!

0
களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் நூற்றாண்டு விழா

களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் நூற்றாண்டு விழா

0
மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா

0
53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

விபத்துகளால் அன்றாடம் சுமார் 30 பேர் உயிரிழப்பு!

0
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

0
களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் நூற்றாண்டு விழா

களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் நூற்றாண்டு விழா

2026-07-02
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர சிஐடியில் முன்னிலை!

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர சிஐடியில் முன்னிலை!

2026-07-02
மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா

2026-07-02
53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

விபத்துகளால் அன்றாடம் சுமார் 30 பேர் உயிரிழப்பு!

2026-07-02
அமெரிக்காவில் அதிர்ச்சி: மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள்

அமெரிக்காவில் அதிர்ச்சி: மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள்

2026-07-02

Recent News

களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் நூற்றாண்டு விழா

களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் நூற்றாண்டு விழா

2026-07-02
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர சிஐடியில் முன்னிலை!

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர சிஐடியில் முன்னிலை!

2026-07-02
மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா

2026-07-02
53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

விபத்துகளால் அன்றாடம் சுமார் 30 பேர் உயிரிழப்பு!

2026-07-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.