அடுத்த பிரதமராக வருபவர் உள்ளூர் சமூகங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதில் இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று முன்னாள் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான ஆண்டி பர்ன்ஹாமின் (Andy Burnham) “தொலைநோக்கு” திட்டத்திற்கும் அவர் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
கீர் ஸ்டார்மரின் (Sir Keir Starmer) தலைமையிலான முந்தைய தொழிற்கட்சி அரசாங்கம், “மாற்றங்களை நோக்கிச் சவால்களை எதிர்கொள்வதற்குப் பதிலாக, பெரும்பாலும் தற்போதைய நிலையையே பாதுகாப்பது போன்ற” ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவிட்டதாக ஏஞ்சலா ரெய்னர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வாரம் கீர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தொழிற்கட்சியின் தலைமைத்துவப் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













