பிரித்தானிய அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட நீண்டகால பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தில் 5 பில்லியன் பவுண்டுகள் பற்றாக்குறை காணப்படுவதாகக் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவி கெமி பேடனோக் குற்றம் சாட்டியுள்ளார்.
பதவியிலிருந்து விலகிய பிரதமர் கீர் ஸ்டார்மர், தனக்குப்பின் வரவுள்ள புதிய பிரதமருக்கு ஒரு மிகப்பெரிய நிதி நெருக்கடியையும் குழப்பத்தையும் விட்டுச் செல்வதாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரதமரிடமிருந்தான வினாக்கள் நேரத்தின் போது அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக, பிரதமர் கீர் ஸ்டார்மர் கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான 15 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான புதிய பாதுகாப்பு திட்டத்தை வெளியிட்டார்.
ஆனால், இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு வரவு செல்வது திட்டத்தில் கூடுதலாக 4.7 பில்லியன் பவுண்டுகளை அடுத்த நிதியமைச்சர் கண்டறிய வேண்டும் எனப் பாதுகாப்பு அமைச்சர் லூக் பொல்லார்ட் ஒப்புக்கொண்டுள்ளார்.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள நேட்டோ உச்சி மாநாடே பிரதமர் சேர் கீர் ஸ்டார்மரின் இறுதி உத்தியோகபூர்வ கடமைகளில் ஒன்றாக அமையவுள்ள நிலையில், இந்த விவகாரம் பிரித்தானிய அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.













