சுரேஷ் சல்லேவின் தடுப்புக்காவலை எதிர்த்த மனு மீதான விசாரணையை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்தது.
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து, அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லே தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (14) ஜூலை 17 ஆம் திகதி வரை ஒத்திவைத்தது.
இன்று இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன நீதிமன்றத்தில் மேலதிக சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
அச்சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, இவ்விவகாரம் குறித்து மேலும் பரிசீலிப்பதற்காக ஜூலை 17 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.











