லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் ஆறாவது போட்டியில் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியை 43 ஓட்டங்களினால் கண்டி ஃபால்கன்ஸ் அணி வீழ்த்தியது.
தம்புள்ளையில் நேற்றிரவு (21) நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தினேஷ் சந்திமால் தலைமையிலான தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதற்கு தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கண்டி ஃபால்கன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்களை குவித்தது.
அணி சார்பில் அதிகபடியாக லஹிரு உதார 34 பந்துகளில் 54 ஓட்டங்களை எடுத்தார்.
பின்னர் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்களை மாத்திரம் எடுக்க முடிந்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் மாத்திரம் அணி சார்பில் அதிகபடியாக 45 பந்துகளில் 74 ஓட்டங்களை எடுத்தார்.
பந்து வீச்சில் நுவான் துஷார 29 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக கண்டி ஃபால்கன்ஸ் அணியின் வனிந்து ஹசரங்க தெரிவானார்.















