காஸ்பியன் கடலில் பயணித்த ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு மாலுமி கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது.
இவ்விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக, தெஹ்ரானில் உள்ள உக்ரைன் தூதர் ஈரானிய வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து ரஷ்யா பெறும் செயற்கைக்கோள் கண்காணிப்புத் தரவுகளை ஈரானுக்கு வழங்கி வருவதை தனது நாடு கவனித்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
காஸ்பியன் கடலில், ரஷ்யாவிலிருந்து ஈரானுக்கு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற ரஷ்யக் கப்பல்களைத் தாக்கியதை உக்ரைனும் ஒப்புக்கொண்டுள்ளது.















