கிழக்கு மாகாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நிலவும் கடும் வெப்பம் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களில், பகல் நேரங்களில் மனித உடல் உணரும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு, கவனம் தேவைப்படும் அளவில் நீடிக்கக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













