• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மஹர சிறைச்சாலை கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்!

மஹர சிறைச்சாலை கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/03
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் (01) இடம்பெற்ற கலவரத்தால் ரூ.150 மில்லியனுக்கும் அதிகமான சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய சிறைச்சாலை திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், கலவரத்தின் போது சிறைச்சாலையின் பல கட்டிடங்கள் மற்றும் சொத்துக்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

கட்டிடங்களின் கூரையோடுகள் உடைக்கப்பட்டதுடன், கைதிகளுக்கான தொழிற்பயிற்சி மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 13 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த இந்த கலவரத்தின் போது, கைதிகள் குறித்த தினத்தில் நள்ளிரவு வரை கற்களை வீசியதாகவும், சிறைச்சாலைக்கு அருகிலுள்ள பல வீடுகளும் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 104 கைதிகள் பூஸா சிறைச்சாலை உள்ளிட்ட ஏழு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

4,100-க்கும் அதிகமான கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் மாலை 4.00 மணியளவில் தொடங்கிய கலவரம், நேற்று காலை 6.00 மணியளவில் பாதுகாப்புப் படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒன்பது கைதிகள் காயமடைந்துள்ளனர்.

சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட போதைப்பொருள் தட்டுப்பாடே இந்த கலவரத்திற்கு காரணமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் காலை நான்கு கைதிகள் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராக கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது. 

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற மூத்த சிறைச்சாலை அதிகாரி மீது கைதிகள் கற்களை வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், சிறைச்சாலை மருத்துவமனையிலிருந்த மருந்துகள், சமையலறையிலிருந்த கூர்மையான உபகரணங்கள் மற்றும் ஆயுதக் களஞ்சியத்திலிருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட முக்கிய பொருட்களை பாதுகாப்பாக அகற்றிய பின்னர் அதிகாரிகள் அப்பகுதியிலிருந்து விலகியுள்ளனர்.

கலவரத்தின் போது சுமார் 1,500 கைதிகள் கட்டுமானப் பணியில் இருந்த சுவரொன்றை உடைத்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், இதனைத் தடுக்க சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில கைதிகள் சிறைச்சாலையின் ஒரு கட்டிடத்திற்கு தீ வைத்ததுடன், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையையும் உடைத்து அங்கிருந்த போதைப்பொருட்களை பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறைச்சாலையின் பல அறைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டதால், சில கைதிகள் வெளியேறியதாகவும், அறைகளுக்குள் தங்கியிருந்த கைதிகள் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த ஏழு கைதிகள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் பின்னர் உயிரிழந்தார். 

உயிரிழந்தவர் வத்தளை – ஹெந்தல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் எனவும், மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் 20 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, மஹர சிறைச்சாலை கலவரம் மற்றும் முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் இரண்டும் வேறுபட்ட தன்மையுடையவை என தெரிவித்தார்.

நீர்கொழும்பு சம்பவம் கைதிகளுக்கிடையிலான மோதலாக இருந்த போதிலும், மஹர சம்பவம் கைதிகளுக்கும் சிறைச்சாலை நிர்வாகத்திற்கும் இடையிலான மோதலாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் அமைதியின்மையை வெளியில் இருந்து சில குழுக்கள் திட்டமிட்டு ஒருங்கிணைத்து இருக்கக்கூடும் என்ற சந்தேகம் இருப்பதாகவும், வெளிப்புற தலையீடு இருந்ததா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலும் இத்தகைய கலவரங்களுக்கு காரணமாக அமையக்கூடிய ஒரு முக்கிய காரணியாக இருப்பதாகக் குறிப்பிட்ட நீதியமைச்சர், அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், மஹர சிறைச்சாலையில் பொதுச் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Related

Tags: mahara prisonகலவரம்சிறைச்சாலைமஹர
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

Next Post

யோஷித, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

Related Posts

யோஷித, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
இலங்கை

யோஷித, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-08-03
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
இலங்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

2026-08-03
நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 
இலங்கை

நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 

2026-08-03
இரு ப‍ேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 20 பேர் வைத்தியசாலையில்!
இலங்கை

இரு ப‍ேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 20 பேர் வைத்தியசாலையில்!

2026-08-03
ஹட்டன் – நுவரெலியா பாடசாலைகள்: இறுதி முடிவு அதிபர்கள் கையில்!
இலங்கை

ஹட்டன் – நுவரெலியா பாடசாலைகள்: இறுதி முடிவு அதிபர்கள் கையில்!

2026-08-03
இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-08-03
Next Post
யோஷித, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

யோஷித, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
யோஷித, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

யோஷித, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

0
மஹர சிறைச்சாலை கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்!

மஹர சிறைச்சாலை கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்!

0
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

0
நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 

நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 

0
இரு ப‍ேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 20 பேர் வைத்தியசாலையில்!

இரு ப‍ேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 20 பேர் வைத்தியசாலையில்!

0
யோஷித, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

யோஷித, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-08-03
மஹர சிறைச்சாலை கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்!

மஹர சிறைச்சாலை கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்!

2026-08-03
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

2026-08-03
நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 

நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 

2026-08-03
இரு ப‍ேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 20 பேர் வைத்தியசாலையில்!

இரு ப‍ேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 20 பேர் வைத்தியசாலையில்!

2026-08-03

Recent News

யோஷித, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

யோஷித, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-08-03
மஹர சிறைச்சாலை கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்!

மஹர சிறைச்சாலை கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்!

2026-08-03
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

2026-08-03
நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 

நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 

2026-08-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.