குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தினசரி விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் ஒரே நாளில் 437 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட இத்தேடுதல் நடவடிக்கையின் போது நாடு முழுவதும் 33,024 நபர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 15 பேரும், நீதிமன்றங்களால் பிடியாணை (Open Warrants) பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 135 பேரும் அடங்குவர்.
மேலும், வீதி ஒழுங்குகளைப் பேணும் வகையில் நடத்தப்பட்ட சோதனைகளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 65 பேரும், ஆபத்தான முறையில் அலட்சியமாக வாகனம் செலுத்திய 68 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 4,189 நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.












