புகலிடக் கோரிக்கையாளர்களுக்குத் தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு ஹோட்டலில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாக, கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
நேற்று மாலை கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இதில் 30 வயது மதிக்கத்தக்க நபர் பலத்த காயமடைந்து, “உயிருக்கு ஆபத்தான நிலையில்” வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலை முயற்சி சந்தேக குற்றச்சாட்டின் கீழ் 20 வயது மதிக்கத்தக்க சோமாலிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த அறிக்கையின் தீவிரத்தன்மை காரணமாக, ஆயுதம் ஏந்திய பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டு, கைது நடவடிக்கையில் உதவி புரிந்தனர். கைது செய்யப்பட்ட நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகள் நடந்து வருவதால் அப்பகுதியில் தொடர்ந்து பொலிஸ் பாதுகாப்பு நீடிக்கிறது என துப்பறியும் கண்காணிப்பாளர் கேட் ஹைடர் (Kate Hyder) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் உள்ளூர் சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதை தாங்கள் உணர்வதாகவும், இது குறித்து ஏதேனும் கவலைகள் இருந்தால் உள்ளூர் அதிகாரிகளிடம் பேசுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.







