• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்

இந்தியா அணிக்கு 420 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து: இந்தியா நிதானம்!

webdev by webdev
2021/02/08
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆட்டநேர முடிவில், புஜாரா 12 ஓட்டங்களுடனும் சுப்மான் கில் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வெற்றி இலக்குடன் ஒப்பிடுகையில், இந்தியா அணி, 381 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னை- சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 578 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ ரூட் 218 ஓட்டங்களையும் சிப்ளி 87 ஓட்டங்களையும் ஸ்டோக்ஸ் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், பும்ரா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் இசாந் சர்மா மற்றும் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, 337 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப் பந்த் 91 ஓட்டங்களையும் வொஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காது 85 ஓட்டங்களையும் புஜாரா 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், டொம் பெஸ் 4 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் எண்டர்சன், ஜொப்ரா ஆர்செர மற்றும் ஜெக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 241 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 178 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா அணிக்கு 420 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது இங்கிலாந்து அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரூட் 40 ஓட்டங்களையும் ஒலீ போப் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், அஸ்வின் 6 விக்கெட்டுகளையும் நதீம் 2 விக்கெட்டுகளையும் இசாந் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 420 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 39 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ரோஹித் சர்மா 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஜெக் லீச் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.

இன்னமும் ஒருநாள் மற்றும் 9 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், 381 என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்தியா அணி, நாளை களமிறங்கவுள்ளது.

Tags: இங்கிலாந்து அணிஇந்தியாஇந்தியா அணிடெஸ்ட் போட்டி
Share12Tweet7Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: முதல்நாளே இங்கிலாந்து தடுமாற்றம்!
கிரிக்கெட்

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: முதல்நாளே இங்கிலாந்து தடுமாற்றம்!

2022-08-18
நியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் மே.தீவுகள் சிறப்பான வெற்றி!
கிரிக்கெட்

நியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் மே.தீவுகள் சிறப்பான வெற்றி!

2022-08-18
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு நாட்டிற்கு விஜயம்!
கிரிக்கெட்

உலகக் கிண்ணத் தொடரை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன

2022-08-17
கெவின் ஓ பிரையன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!
விளையாட்டு

கெவின் ஓ பிரையன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

2022-08-17
ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய். ஜூடின் சிந்துஜன் நியமனம்
உள்ளுா் விளையாட்டு

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய். ஜூடின் சிந்துஜன் நியமனம்

2022-08-16
ரஷித் கானின் சிறப்பான பங்களிப்பால் அயர்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி!
கிரிக்கெட்

ரஷித் கானின் சிறப்பான பங்களிப்பால் அயர்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி!

2022-08-16
Next Post

ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77ஆயிரத்தைக் கடந்தது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

2022-08-12
இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

2022-08-03
சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

குறைக்கப்படுகின்றது எரிபொருளின் விலை?

2022-07-26
ஆளுநர் நியமனங்களைவிட மாகாணத்தில் மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதே முதன்மையானது- இராதாகிருஸ்ணன்

ஆளுநர் நியமனங்களைவிட மாகாணத்தில் மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதே முதன்மையானது- இராதாகிருஸ்ணன்

2022-08-18
தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்!

தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்!

2022-08-18
முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டது

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டது

2022-08-18
அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காதிருக்க தீர்மானம்?

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் சஜித்தின் சகாக்கள் – எதிர்கட்சி தலைவர் பதவியினை இழக்கின்றார் சஜித்?

2022-08-18
“கோட்டா கோ கம” போராட்ட தளத்தில் இருந்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறுவதாக அறிவிப்பு

போராட்டக்காரர்களிடமிருந்து நட்டஈடு கோர தயாராகின்றது அரசாங்கம்!

2022-08-18

Recent News

ஆளுநர் நியமனங்களைவிட மாகாணத்தில் மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதே முதன்மையானது- இராதாகிருஸ்ணன்

ஆளுநர் நியமனங்களைவிட மாகாணத்தில் மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதே முதன்மையானது- இராதாகிருஸ்ணன்

2022-08-18
தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்!

தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்!

2022-08-18
முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டது

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டது

2022-08-18
அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காதிருக்க தீர்மானம்?

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் சஜித்தின் சகாக்கள் – எதிர்கட்சி தலைவர் பதவியினை இழக்கின்றார் சஜித்?

2022-08-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.