• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

அரசாங்கத்தின் கணக்கின்படி ஐ.நா.வில் வெற்றி: ஜனாதிபதி தேர்தலில் கோட்டா படுதோல்வி – மனோ கணேசன்

Dhackshala by Dhackshala
March 25, 2021
in இலங்கை, முக்கிய செய்திகள்
300 3
A A
0
மனோ
130
SHARES
4.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகின் கண்காணிப்பு வலயத்தில் மீண்டும் இலங்கை என்ற உண்மையை அரசாங்கம் சிங்கள மக்களிடம் மறைக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அரசாங்கம் கூறியுள்ள கணக்குப்படி ஐ.நா. வாக்கெடுப்பில் இலங்கை தோற்கடிக்கப்படவில்லை என்றால், ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவும் வெற்றிபெறவில்லையென்றேக் கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து தனது உத்தியோப்பூர்வ முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், சிங்கள மக்களுக்கு இந்த விடயம் குறித்து எடுத்து கூற, முன்னாள் நல்லிணக்க துறைசார் அமைச்சர் என்ற முறையில் தான் கடமைப்பட்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையை கண்காணித்து, இலங்கை குறித்து வாய்மொழி அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர் அல்லது ஒக்டோபரிலும் எழுத்து மூல அறிக்கையை அடுத்த வருடம் பெப்ரவரி அல்லது மார்ச்சிலும் சமர்ப்பிக்கும்படி ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம், ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை கோரியுள்ளது

இதையடுத்து, இலங்கை திருந்தாவிட்டால் பொறுப்பு கூறல் தொடர்பாக அடுத்து எடுக்கப்பட வேண்டிய காத்திரமான நடவடிக்கைகளை அடுத்த வருடம் செப்டம்பர் அல்லது ஒக்டோபரில் சிபாரிசு செய்யும்படியும் அந்தத் தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.

இதனை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் இன்று கண்ணை கட்டி கணக்கு வித்தை காட்டுகிறது என  விமர்சித்துள்ள மனோ, தமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளையும் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத நாடுகளையும் கூட்டிக்காட்டி ஐ.நா. தீர்மானம் தோற்றுவிட்டது என கூறுவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெற்ற வாக்குகள் சுமார் 69 இலட்சம்.  அவருக்கு எதிராக வாக்களித்த, வாக்களிக்காத, ஒட்டுமொத்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் தொகை சுமார் 90 இலட்சமாகும்.

ஆகவே வாக்களிக்காதவர்களும் நம்மவரே என்ற அரசாங்கத்தின் கணக்கின்படி, கோட்டாபய ராஜபக்ஷ உண்மையில் தோல்வியடைந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

ஆகவே அவர் அரசியலைவிட்டு வீட்டுக்கு போக வேண்டுமோ? என்ற கேள்வியை வெளிவிவகார அமைச்சர், தினேஷ் குணவர்தனவிடம் கேட்க விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதற்கட்டமாக பன்னிரெண்டு விசேட ஊழியர்கள், இலங்கை கண்காணிப்பு தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் நியமிக்கப்பட உள்ளார்கள்.

மேலும் இலங்கை தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க சுமார் 29 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அலுவலகம் ஐநா பொதுசபையை கோரியுள்ளது.

இதன்மூலம், சாட்சியம், தகவல் ஆகியவற்றை சேகரிக்கும் கண்காணிக்கும் நடவடிக்கைகளை அலுவலகம் ஆரம்பிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்பு கூறல், நீதி விசாரணை, தண்டனை, நஷ்டஈடு, காணாமல் போனோர் அலுவலகம் சுயாதீனமாக செயற்படல், அரசியல் தீர்வு, மாகாணசபை தேர்தல்,பன்மைத்துவம் ஏற்பு ஆகியவை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் இனியும் சர்வதேசத்துடன் முரண்பட முடியாது என்றும் மனோ சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தகைய பிற்போக்கு அரசியல் விளையாட்டுக்கு இனி கால அவகாசமும் இல்லை என்றும் அதற்கு இது உள்நாட்டு மைதானமும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: அரசாங்கம்மனோ கணேசன்
Share52Tweet33Send

Related Posts

மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் விடுவிப்பு!
இலங்கை

மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் விடுவிப்பு!

April 18, 2021
திருகோணமலையில் நீராடச் சென்ற இரு சிறுவர்கள் உயிரிழப்பு
இலங்கை

திருகோணமலையில் நீராடச் சென்ற இரு சிறுவர்கள் உயிரிழப்பு

April 18, 2021
உள்வீட்டு மோதலால் மொட்டுக் கட்சி உடையுமா? – இலங்கை விடயத்தில் உலக நாடுகளின் வியூகம் என்ன?
ஆசிரியர் தெரிவு

உள்வீட்டு மோதலால் மொட்டுக் கட்சி உடையுமா? – இலங்கை விடயத்தில் உலக நாடுகளின் வியூகம் என்ன?

April 18, 2021
நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி!
இலங்கை

இலங்கையில் 2ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பான தீர்மானம் நாளை!

April 18, 2021
ஈழத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களை அரசாங்கம் பறிக்கிறது – வைகோ
இலங்கை

ஈழத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களை அரசாங்கம் பறிக்கிறது – வைகோ

April 18, 2021
நாட்டுக்கு சார்பான முடிவுகளை ஒரே கட்சியாக இணைந்தே எடுக்கின்றோம்- மஹிந்த அமரவீர
இலங்கை

நாட்டுக்கு சார்பான முடிவுகளை ஒரே கட்சியாக இணைந்தே எடுக்கின்றோம்- மஹிந்த அமரவீர

April 18, 2021
Next Post
கொழும்பில் போதைப்பொருள் பாவனை மிகவும் அதிகரித்து வருகிறது – நாமல் கவலை!

கொழும்பில் போதைப்பொருள் பாவனை மிகவும் அதிகரித்து வருகிறது - நாமல் கவலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0
மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் விடுவிப்பு!

மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் விடுவிப்பு!

April 18, 2021
திருகோணமலையில் நீராடச் சென்ற இரு சிறுவர்கள் உயிரிழப்பு

திருகோணமலையில் நீராடச் சென்ற இரு சிறுவர்கள் உயிரிழப்பு

April 18, 2021
சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்க முடிவு செய்யவில்லை – அவுஸ்ரேலிய பிரதமர்

சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்க முடிவு செய்யவில்லை – அவுஸ்ரேலிய பிரதமர்

April 18, 2021
உள்வீட்டு மோதலால் மொட்டுக் கட்சி உடையுமா? – இலங்கை விடயத்தில் உலக நாடுகளின் வியூகம் என்ன?

உள்வீட்டு மோதலால் மொட்டுக் கட்சி உடையுமா? – இலங்கை விடயத்தில் உலக நாடுகளின் வியூகம் என்ன?

April 18, 2021

Recent News

மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் விடுவிப்பு!

மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் விடுவிப்பு!

April 18, 2021
திருகோணமலையில் நீராடச் சென்ற இரு சிறுவர்கள் உயிரிழப்பு

திருகோணமலையில் நீராடச் சென்ற இரு சிறுவர்கள் உயிரிழப்பு

April 18, 2021
சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்க முடிவு செய்யவில்லை – அவுஸ்ரேலிய பிரதமர்

சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்க முடிவு செய்யவில்லை – அவுஸ்ரேலிய பிரதமர்

April 18, 2021
உள்வீட்டு மோதலால் மொட்டுக் கட்சி உடையுமா? – இலங்கை விடயத்தில் உலக நாடுகளின் வியூகம் என்ன?

உள்வீட்டு மோதலால் மொட்டுக் கட்சி உடையுமா? – இலங்கை விடயத்தில் உலக நாடுகளின் வியூகம் என்ன?

April 18, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.