• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா, நீதிமன்றமா?

ஜனாதிபதியும் அமைச்சர் டக்ளசும் பதிலளிக்க வேண்டும்- சி.வி.

Litharsan by Litharsan
2021/04/10
in இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
148 2
A A
0
69
SHARES
2.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா, நீதிமன்றமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) தெரிவிக்கையில், “யாழ். மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நேற்றிரவு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளிப்பதாகத் தன்னிடம் கூறியதாக ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மணிவண்ணன் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னராகவே, மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்றும் அவர் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படமாட்டாது எனவும் சாதாரண சட்டத்தின் கீழேயே வழக்கு தொடரப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்தக் கூற்று இந்த நாட்டில் நீதிமன்றங்களும், பொலிஸாரும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றனவா என்ற கேள்வியையும் ஜனாதிபதியினதும் அவரின் அரசாங்கத்தினதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்பவே அவை செயற்படுகின்றனவா என்ற கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, மணிவண்ணன் அரசியல் உள்நோக்கம் கருதி, வேண்டுமென்றே கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்ற உண்மையையும் அமைச்சரின் கூற்று வெளிப்படுத்தி நிற்கின்றது. மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளித்தது உண்மை என்றால், மணிவண்ணன் ஏதோ தவறு செய்துள்ளார் எனறே அர்த்தப்படும்.

ஆனால், மணிவண்ணன் செய்தது தவறு என்று பொலிஸாரினால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. ஆகவே, ஜனாதிபதி என்ன அடிப்படையில் மணிவண்ணனுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார்?

அமைச்சர் ஏற்கனவே கூறியதுபோல, மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

ஆனால், யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பொலிஸார் மற்றும் மணிவண்ணன் தரப்பு வாதப் பிரதிவாதங்களைக் கேட்டு அறிந்த பின்னரேயே மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக அறிகின்றேன்.

ஆனால், மணிவண்ணனுக்கு ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தேவானந்தா கூறியிருப்பதும் மணிவண்ணன் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்படுவதற்கு முன்னதாகவே அவர் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்றும் பொலிஸார் இவ்வாறுதான் நடந்து கொள்வார்கள் என்றும் அமைச்சர் முன்னதாகவே கூறியிருப்பது, இந்த நாட்டில் பொலிஸ் திணைக்களமும் நீதிமன்றங்களும் எந்தளவுக்குச் சுயாதீனத்தை இழந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரமாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான செயல்களை பொலிஸ் திணைக்களத்தையும் நீதிமன்றங்களையும் அவமதிக்கும் செயற்பாடுகளாகவும் கொள்ள முடியும்.

இதுதொடர்பாக, ஜனாதிபதியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவே பொது மக்கள் இம்சைப்படப் போகின்றார்கள் என்றால் நீதிமன்றங்கள் எதற்காக?

அத்துடன் பொலிசார் மக்களுக்கான பொலிசாரா அல்லது ஜனாதிபதியின் கையாட்களா? விடை வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

Related

Tags: டக்ளஸ் தேவானந்தாவிஸ்வலிங்கம் மணிவண்ணன்ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை!

Next Post

புதிய அரசியல் யாப்பில் சைவத்திற்கு முன்னுரிமை கோரி பல பகுதிகளில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!

Related Posts

நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
இலங்கை

இதுவரை 14 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான கஞ்சா மீட்பு!

2025-10-27
வலைத் தொழிற்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட  இளங்குமரன் MP!
இலங்கை

வலைத் தொழிற்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட இளங்குமரன் MP!

2025-10-27
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள்!
இலங்கை

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள்!

2025-10-27
நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!
இலங்கை

மூன்று வாரங்களில் இலட்சத்தை தாண்டிய சுற்றுலா பயணிகளின் வருகை!

2025-10-27
இங்கிலாந்தில் தற்காலிகமாக விடுவிக்கப்பட்ட கைதியை தேடும் பொலிஸார்!
இங்கிலாந்து

பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபரை வெளியிட்டமை குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கவலை!

2025-10-27
ஆஷஸ் தொடரின் முதல் போட்டியை தவறவிடும் பேட் கம்மின்ஸ்!
கிரிக்கெட்

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியை தவறவிடும் பேட் கம்மின்ஸ்!

2025-10-27
Next Post
புதிய அரசியல் யாப்பில் சைவத்திற்கு முன்னுரிமை கோரி பல பகுதிகளில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!

புதிய அரசியல் யாப்பில் சைவத்திற்கு முன்னுரிமை கோரி பல பகுதிகளில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!

உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைக்க முயற்சிக்கப்படலாம்- விசேட கலந்துரையாடல்

உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைக்க முயற்சிக்கப்படலாம்- விசேட கலந்துரையாடல்

நாட்டில் இன்று மட்டும் 260 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு: ஒருவர் சாவு!

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

2025-10-23
உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

2025-10-10
சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!

சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!

2025-10-04
இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

2025-10-14
ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

2025-10-16
ஆரம்பமாகவுள்ள சார்பட்டா பரம்பரை 2 திரைப்படம்!

ஆரம்பமாகவுள்ள சார்பட்டா பரம்பரை 2 திரைப்படம்!

0
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

இதுவரை 14 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான கஞ்சா மீட்பு!

0
ஜப்பான் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பெலிண்டா பென்சிக்

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பெலிண்டா பென்சிக்

0
வலைத் தொழிற்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட  இளங்குமரன் MP!

வலைத் தொழிற்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட இளங்குமரன் MP!

0
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள்!

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள்!

0
ஆரம்பமாகவுள்ள சார்பட்டா பரம்பரை 2 திரைப்படம்!

ஆரம்பமாகவுள்ள சார்பட்டா பரம்பரை 2 திரைப்படம்!

2025-10-27
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

இதுவரை 14 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான கஞ்சா மீட்பு!

2025-10-27
ஜப்பான் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பெலிண்டா பென்சிக்

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பெலிண்டா பென்சிக்

2025-10-27
வியன்னா ஓபன் டென்னிஸ்: சம்பியன் பட்டம் வென்றார் சின்னர்

வியன்னா ஓபன் டென்னிஸ்: சம்பியன் பட்டம் வென்றார் சின்னர்

2025-10-27
வலைத் தொழிற்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட  இளங்குமரன் MP!

வலைத் தொழிற்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட இளங்குமரன் MP!

2025-10-27

Recent News

ஆரம்பமாகவுள்ள சார்பட்டா பரம்பரை 2 திரைப்படம்!

ஆரம்பமாகவுள்ள சார்பட்டா பரம்பரை 2 திரைப்படம்!

2025-10-27
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

இதுவரை 14 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான கஞ்சா மீட்பு!

2025-10-27
ஜப்பான் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பெலிண்டா பென்சிக்

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பெலிண்டா பென்சிக்

2025-10-27
வியன்னா ஓபன் டென்னிஸ்: சம்பியன் பட்டம் வென்றார் சின்னர்

வியன்னா ஓபன் டென்னிஸ்: சம்பியன் பட்டம் வென்றார் சின்னர்

2025-10-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.