• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் கடலட்டை பண்ணைகள் குறித்த சில அரசியல்வாதிகளின் கருத்து எதிர்காலத்தைப் பாதிக்கிறது – கடற்றொழிலாளர்கள் விசனம்!

யாழில் கடலட்டை பண்ணைகள் குறித்த சில அரசியல்வாதிகளின் கருத்து எதிர்காலத்தைப் பாதிக்கிறது – கடற்றொழிலாளர்கள் விசனம்!

Dhackshala by Dhackshala
2021/07/20
in இலங்கை
73 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசியல் இலக்குகளை அடைந்துகொள்கின்ற நோக்கோடு அரசியல்வாதிகள் சிலரினால் வெளிப்படுத்தப்படுகின்ற கருத்துக்கள் தங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தினை தோற்றுவித்துள்ளதாக கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு பணம் பெற்றுக்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்த கருத்துக்கு தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில கடலட்டைப் பண்ணை உருவாக்கும் திட்டம் தொடர்பாக அண்மைக் காலமாக வெளியாகின்ற கருத்துக்கள் தொடர்பாக கிளிநொச்சியில் கருத்து தெரிவிக்கும்போதே கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்கள், “கடலட்டைப் பண்ணை உருவாக்கம் என்பது அன்றாடம்காட்சிகளாகவும் பொருளாதார அடிமைகளாகவும் வாழ்ந்து வந்த எங்களுக்கு கிடைத்திருக்கின்ற வரப்பிரசாதமாகவே கருதுகின்றோம்.

கடந்த காலங்களில் அனைத்தையும் இழந்து, நாதியற்றவர்களாக இருந்த எங்களுக்கு கடலட்டைப் பண்ணை உருவாக்கம் என்பது எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தோவின் முயற்சியினாலும் தற்துணிவான தீர்மானங்களினாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் வடக்கு மாகாணத்தில் சுமார் 25இற்கும் மேற்பட்ட பண்ணைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் நூற்றுக்கணக்கான கடலட்டைப் பண்ணைகளை அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாணத்திற்கான பிரதானி அண்மையில் தெரிவித்துள்ளார். இது உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்தியாகும்.

ஏனெனில், ஏற்கனவே இரணைதீவுப் பிரதேசத்தினைச் சேர்ந்த எமக்கு இதுவரை 83 கடலட்டைப் பண்ணைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் எமது பிரதேசத்தில் விண்ணப்பித்திருக்கின்றார்கள். அவர்களுக்கும் பண்ணைகள் வழங்கப்படுகின்ற பட்சத்தில் எமக்கான எதிர்காலத்தை நாம் வளமானதாக உருவாக்கிக் கொள்ள முடியும்.

நாங்கள் யுத்தத்தினால் நாடோடிகளாக அலைந்து அனைத்தையும் இழந்து, நாளாந்த வாழ்கையில் எமது அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே திண்டாடிக் கொண்டு இருக்கின்றவர்கள்.

அப்படிப்பட்ட நாங்கள் தலா பத்து இலட்சம் கொடுத்து கடலட்டைப் பண்ணைகளை பெற்றிருக்கின்றோம் என்று தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

இவ்வாறான பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை வெளியிடுவதை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் போன்றவர்கள் நிறுத்த வேண்டும். அவர்களிடம் நாம் மன்றாட்டமாக கேட்கின்றோம். தயவு செய்து வைக்கோல் பட்டடை நாய்கள் போன்று செயற்படாதீர்கள்.

உங்களால் செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஏனையவர்கள் செய்வதை இடையூறு செய்யாமல் இருங்கள்.

நீங்கள் அரசியல் நலன்களை அடைந்து கொள்வதற்காக வெளியிடுகின்ற இவவாறான கருத்துக்களினால், கடலட்டைப் பண்ணை உருவாக்கம் தடைப்படுமானால், விண்ணப்பித்துவிட்டு பண்ணைகளுக்காக காத்திருக்கின்ற நூற்றுக்கணக்கானோரின் வாழ்வாதாரத்திற்கான மாற்றுத் திட்டம் உங்களிடம் என்ன இருக்கின்றது? என்று கேட்க விரும்புகின்றோம்” என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Tags: கடற்றொழிலாளர் சங்கங்கள்டக்ளஸ் தேவானந்தா
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் சிறப்பாக செயல்படுகின்றனர் – ஜனாதிபதி ரணில்
இலங்கை

ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் – ஜனாதிபதி!

2023-02-04
இலங்கைக்கு கடன் உதவி வழங்குங்கள் : சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா கோரிக்கை
இலங்கை

இலங்கைக்கு கடன் உதவி வழங்குங்கள் : சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா கோரிக்கை

2023-02-04
“இருள்சூழ்ந்த சுதந்திரம்” என பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் போராட்டம்
அம்பாறை

“இருள்சூழ்ந்த சுதந்திரம்” என பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் போராட்டம்

2023-02-04
கைதிகள் அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு – நீதியமைச்சர் நடவடிக்கை!
இலங்கை

மார்ச் 31க்குள் IMF ஒப்பந்தம் – அமைச்சர் நம்பிக்கை !

2023-02-04
வர்த்தகம், முதலீடு மற்றும் மேம்பாட்டு உதவிகள் குறித்து இலங்கை-ஜப்பான் பேச்சு
இலங்கை

வர்த்தகம், முதலீடு மற்றும் மேம்பாட்டு உதவிகள் குறித்து இலங்கை-ஜப்பான் பேச்சு

2023-02-04
வவுனியாவில் அமைந்துள்ள பண்டார வன்னியனுன் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிப்பு
இலங்கை

வவுனியாவில் அமைந்துள்ள பண்டார வன்னியனுன் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிப்பு

2023-02-04
Next Post
கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,686பேர் பாதிப்பு- 6பேர் உயிரிழப்பு!

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 701பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு!

இல்லாத கூட்டமைப்பிற்கு எவ்வாறு தலைவராக இருக்க முடியும் – இரா.சம்பந்தனிடம் கேள்வி!

2023-01-18
யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நீடிப்பு!

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!

2023-01-20
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு!

கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தரின் தோல்வி ? – நிலாந்தன்.

2023-01-29
ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!!

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!!

2023-01-15
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

குறைக்கப்பட்டது 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகள்!

2023-01-18
சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் சிறப்பாக செயல்படுகின்றனர் – ஜனாதிபதி ரணில்

ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் – ஜனாதிபதி!

2023-02-04
சீன பலூன் தொடர்பான சர்ச்சையை அமைதியான முறையில் கையாளுமாறு அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்!

சீன பலூன் தொடர்பான சர்ச்சையை அமைதியான முறையில் கையாளுமாறு அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்!

2023-02-04
இலையுதிர்கால இறுதி பூஸ்டர் தடுப்பூசியை பெற விரையுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்!

இலையுதிர்கால இறுதி பூஸ்டர் தடுப்பூசியை பெற விரையுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்!

2023-02-04
இலங்கைக்கு கடன் உதவி வழங்குங்கள் : சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா கோரிக்கை

இலங்கைக்கு கடன் உதவி வழங்குங்கள் : சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா கோரிக்கை

2023-02-04
“இருள்சூழ்ந்த சுதந்திரம்” என பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் போராட்டம்

“இருள்சூழ்ந்த சுதந்திரம்” என பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் போராட்டம்

2023-02-04

Recent News

சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் சிறப்பாக செயல்படுகின்றனர் – ஜனாதிபதி ரணில்

ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் – ஜனாதிபதி!

2023-02-04
சீன பலூன் தொடர்பான சர்ச்சையை அமைதியான முறையில் கையாளுமாறு அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்!

சீன பலூன் தொடர்பான சர்ச்சையை அமைதியான முறையில் கையாளுமாறு அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்!

2023-02-04
இலையுதிர்கால இறுதி பூஸ்டர் தடுப்பூசியை பெற விரையுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்!

இலையுதிர்கால இறுதி பூஸ்டர் தடுப்பூசியை பெற விரையுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்!

2023-02-04
இலங்கைக்கு கடன் உதவி வழங்குங்கள் : சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா கோரிக்கை

இலங்கைக்கு கடன் உதவி வழங்குங்கள் : சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா கோரிக்கை

2023-02-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.