மத்திய அரசு, உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பது குறித்த கொலீஜியம் பரிந்துரைகளை தாமதப்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் 60 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 29 பேர் மாத்திரமே உள்ளதாக சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியுள்ளது.
இந்நிலையில் கொலிஜியத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு தாமதப்படுத்துவதினால், வழக்குகளின் விசாரணை மற்றும் தீர்ப்பு ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுவதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.