• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

இலங்கை அகதிகள் விடயத்தில் தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் டக்ளஸ்

Yuganthini by Yuganthini
2021/08/28
in இலங்கை, முக்கிய செய்திகள்
75 0
A A
0
இலங்கை அகதிகள் விடயத்தில் தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் டக்ளஸ்
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் வாழ்வாதார மலர்ச்சிக்காக தமிழக முதல்வரினால் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளமைக்கு இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்றொழில் அமைச்சரினால் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு  நன்றி தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில்  அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கைத் தமிழ் மக்கள் தஞ்சம் தேடி வந்த சந்தர்ப்பங்களில், அவர்களை அரவணைத்து பாதுகாப்பு அளித்தவர்கள் தமிழக மக்கள்.

அதாவது,  தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான கலைஞர், எம்.ஜீ.ஆர். மற்றும் ஜெயலலிதா  ஆகியோரும் தங்களால் முடிந்தளவு ஒத்துழைப்புகளை வழங்கியிருக்கின்றார்கள்.

அதேபோன்று ஏனைய அரசியல் தலைவர்களும் தங்களுடைய தார்மீக ஆதரவினை வெளிப்படுத்தி வந்தனர்.

இதனால்தான் தமிழக மக்கள் குரல் கொடுப்பார்கள், கரம் நீட்டுவார்கள் என்ற நம்பிக்கை இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் இன்றும் ஆழமாக இருக்கின்றது.

அதனையும் நிரூபிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் வாழ்வாதார மலர்ச்சிக்காக  நிதி ஒதுக்கீடுகள் மேற்கொண்டுள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது.

இந்நிலையில், மீண்டும் இலங்கைக்கு திரும்பி வருவதற்கு விரும்புகின்ற எமது மக்களுக்கு, கௌரவமான வாழ்வியலை ஏற்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை தமிழக அரசுடன் இணைந்து மேற்கொள்வதற்கு தயாராகவே இருகின்றேன்.

இதேவேளை, இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பாகவும் தமிழக முதல்வர் தீர்க்கமான கரிசனை செலுத்த வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்.

அதாவது, இலங்கை கடற்பரப்பை நம்பி வாழுகின்ற தமிழக கடற்றொழிலாளர்களுக்கு, மாற்று தொழில் முறைகளை வழங்குது  குறித்து தமிழக முதல்வர், இந்திய மத்திய அரசாங்கத்துடன் தீர்க்கமான பேச்சுக்களை முன்னெடுத்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

Tags: டக்ளஸ் தேவானந்தாமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Share13Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்?
இலங்கை

அமைச்சரவை அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் குறித்த முழு விபரம்!

2022-05-25
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !
இலங்கை

இன்றும் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது: வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ

2022-05-25
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை!
இலங்கை

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளன

2022-05-25
சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக வருவோரில் 10 வீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்!
இலங்கை

ஒரு மில்லியனுக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் தேங்கியுள்ளதாக தகவல்?

2022-05-25
வயம்ப பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – 35 மாணவர்கள் கைது
இலங்கை

வயம்ப பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – 35 மாணவர்கள் கைது

2022-05-25
கொரோனா தடுப்பூசி கொள்வனவு: இலங்கைக்கு உலக வங்கி பாராட்டு
இலங்கை

இலங்கைக்கு புதிய நிதி உதவிகளை வழங்கத் திட்டமிடவில்லை – உலக வங்கி!

2022-05-25
Next Post
கொரோனா தரவுகளே முரண்பாடு என்றால் அரசாங்கத்தின் இறுதி யுத்த தரவுகளை எவ்வாறு நம்ப முடியும்?- சாணக்கியன்

கொரோனா தரவுகளே முரண்பாடு என்றால் அரசாங்கத்தின் இறுதி யுத்த தரவுகளை எவ்வாறு நம்ப முடியும்?- சாணக்கியன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2022-05-18
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

2022-05-11
மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்?

அமைச்சரவை அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் குறித்த முழு விபரம்!

2022-05-25
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

இன்றும் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது: வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ

2022-05-25
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை!

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளன

2022-05-25
சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக வருவோரில் 10 வீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்!

ஒரு மில்லியனுக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் தேங்கியுள்ளதாக தகவல்?

2022-05-25
வயம்ப பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – 35 மாணவர்கள் கைது

வயம்ப பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – 35 மாணவர்கள் கைது

2022-05-25

Recent News

edit post
மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்?

அமைச்சரவை அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் குறித்த முழு விபரம்!

2022-05-25
edit post
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

இன்றும் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது: வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ

2022-05-25
edit post
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை!

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளன

2022-05-25
edit post
சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக வருவோரில் 10 வீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்!

ஒரு மில்லியனுக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் தேங்கியுள்ளதாக தகவல்?

2022-05-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.