• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கை யுவதியை அழைத்துச் செல்வதாக ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது!

1.404 Views
11 months ago
97 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Dhackshala Dhackshala
    Subscriber

    தனுஷ்கோடி கடல் வழியாக நாட்டுப்படகில் இலங்கை யுவதியை சட்டவிரோதமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்களை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) ஆஜர்படுத்திய நிலையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    தனுஷ்கோடியில் இருந்து நேற்று திங்கட்கிழமை அதிகாலை நாட்டுப் படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் முதலாவது மணல் திட்டில் ஒரு பெண் தனியாக நிற்பதை பார்த்து மெரைன் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

    தகவலின் அடிப்படையில் மணல் திட்டில் ரோந்து படகில் சென்ற மெரைன் பொலிஸார் குறித்த பெண்ணை மீட்டு ராமேஸ்வரம் மெரைன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை செய்ததில் அந்த பெண் இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி என தெரியவந்தது.

    இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பாஸ்போர்ட் மூலம் விமானத்தில் சென்னைக்கு வந்து வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

    இலங்கை முள்ளிவாய்க்காலில் உள்ள அவரது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் மீண்டும் இலங்கைக்கு செல்ல முடிவு செய்த அந்த பெண் ராமேஸ்வரத்தில் இருந்து சட்டவிரோதமாக படகில் செல்ல முடிவு செய்து, கடந்த 4ஆம் திகதி சென்னையில் இருந்து பேருந்து மூலம் சனிக்கிழமை காலை ராமேஸ்வரத்தை வந்தடைந்துள்ளார்.

    அதன்பின்னர் ராமேஸ்வரத்தில் தனியார் தங்கும் விடுதியில் தங்கிய அந்த பெண், தனுஷ்கோடியை சேர்ந்த முனீஸ்வரனிடம் இலங்கைக்கு செல்ல படகு கட்டணமாக ரூபாய் 30 ஆயிரம் கொடுத்துள்ளார்.

    அதனையடுத்து, சனிக்கிழமை மாலை பாம்பன் சின்ன பாலம் கடற்கரைக்குச் சென்ற அந்த பெண் கடலில் தயாராக இருந்த ஒரு படகில் புறப்பட்டு இலங்கை சென்றுள்ளார்.

    கஸ்தூரியை ஏற்றிச்சென்ற படகோட்டிகள் நீண்ட நேரம் கடலில் சுற்றி விட்டு நள்ளிரவு 12 மணியளவில் இலங்கை வந்துவிட்டதாக தெரிவித்து தனுஷ்கோடி கடல் பகுதியில் அமைந்துள்ள ஒன்றாம் மணல் திட்டில் அந்தப் பெண்யை இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.

    இதனையடுத்தே தகவலறிந்த மெரைன் பொலிஸார் இலங்கைக்கு சட்டவிரோதமாக அழைத்துச் செல்வதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய மீனவர் முனீஸ்வரன், படகில் ஏற்றி சென்ற முனிராஜ், சிபிராஜ் மற்றும் சின்ன பாலத்தை சேர்ந்த மீனவ பெண் மற்றும் இலங்கை பெண் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர்.

    Category: இலங்கை பிரதான செய்திகள்
    Tags: தனுஷ்கோடிமீனவர்கள்
    Share17Tweet11Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    கொரோனா தொற்றுக்கு உள்ளான ஆறு பேருக்கு யாழ்.போதனாவில் சிகிச்சை!
    இலங்கை

    கொரோனா தொற்றுக்கு உள்ளான ஆறு பேருக்கு யாழ்.போதனாவில் சிகிச்சை!

    2022-08-09
    123ஆவது நாளாக நீடிக்கும் போராட்டம் – காலிமுகத்திடலில் பாதுகாப்பு அதிகரிப்பு
    இலங்கை

    123ஆவது நாளாக நீடிக்கும் போராட்டம் – காலிமுகத்திடலில் பாதுகாப்பு அதிகரிப்பு

    2022-08-09
    ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகமாக சமன் ரத்னப்பிரிய நியமனம்
    இலங்கை

    நீதிமன்ற உத்தரவை மீறவில்லை – சமன் ரத்னபிரிய

    2022-08-09
    2022 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
    இலங்கை

    2022 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

    2022-08-09
    பெரும்போகத்திற்கு தேவையான எரிபொருளை வழங்க துரித நடவடிக்கை!
    இலங்கை

    பெரும்போகத்திற்கு தேவையான எரிபொருளை வழங்க துரித நடவடிக்கை!

    2022-08-09
    எரிபொருளின் தரம் குறித்து சோதனை… மீறினால் உரிமம் இரத்து!
    இலங்கை

    சுற்றுலாத் துறைக்கான புதிய எரிபொருள் அட்டை!

    2022-08-09
    Next Post
    துருக்கியில் கொவிட்-19 தொற்றினால் 49ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

    துருக்கியில் கொவிட் தொற்றினால் 65இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.