• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட்டாலே நிரந்தர தீர்வு காண முடியும்- சுரேந்திரன்

சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட்டாலே நிரந்தர தீர்வு காண முடியும்- சுரேந்திரன்

shagan by shagan
2021/11/15
in இலங்கை, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இனக்குடிப்பரம்பலை பேணுவதற்கு தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் இணைந்து ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்பட்டு சர்வதேச ஆதரவினை பெற்றாலே நிரந்தர தீர்வு காண முடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் காணி அபகரிப்பு மற்றும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”வடக்கு, கிழக்கு தாயக பூமியிலே எங்கள் இனக்குடிபரம்பலை சிதைப்பதற்கும், எங்களுடைய பிரதிநிதித்துவங்களை குறைப்பதற்கும், எங்கள் தாயக பூமியை கூறு போடுவதற்குமான,  திட்டமிட்ட காணி அபகரிப்பும், அந்த காணி அபகரிப்பின் ஊடாக, சிங்கள குடியேற்றங்களை கொண்டு வந்து, நிறுவுவதற்கான முயற்சியை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

இது கடந்த காலங்களிலும், அரசாங்கங்கள், இதனை செய்து வந்திருக்கின்றன. அண்மையில் பாராளுமன்றத்திலே இது சம்பந்தமான எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுவுவதற்கு எதிராக  முன்னெடுக்கப்பட இருக்கின்ற போராட்டத்திற்கு, தமிழீழ விடுதலை இயக்கம் தன்னுடைய முற்றுமுழுதான ஆதரவினை வழங்கும்.  இந்த போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்து எங்கள் காணி நிலங்களை காப்பாற்ற வேண்டிய கட்டாய சூழலில் இன்று இருக்கின்றோம்.

எமது இனக்குடி பரம்பலை பேண வேண்டிய சூழலில் இருக்கின்றோம். இதில்  நாங்கள் உறுதியாக, பற்றுறுதியோடு பயணிக்க வேண்டிய சூழல் இன்று இருக்கின்றது.  இதைத் தாண்டி நாங்கள் பாராளுமன்றத்திலே குரல் கொடுப்பதும், தொடர்ந்து இதற்கு எதிராக போராடுவதும் என்பது நிரந்தர  தீர்வாக அமையாது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்படும் வரைக்கும் இந்த குடியேற்றங்களை பற்றிய சிந்தனைகள் இருக்கவில்லை.

எங்களுடைய மாகாண சபை சொற்ப அதிகாரங்களோடு செயல்பட்டுக் கொண்டிருந்த போது கூட கடந்த காலங்களில் இப்படியான காணி அபகரிப்பையும், குடியேற்றங்களையும்  நிறுத்தி இருந்தது.

இந்த மாகாண சபை அதிகாரங்களை எங்களுடைய அரசியல் தீர்வை எட்டும் வரைக்கும், பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வந்த இந்த மாகாண சபை அதிகாரங்களை, நிரந்தரமாக, மீளப் பெறப்பட முடியாத, காணி அதிகாரங்களை, பெற்றுக்கொள்வதன் மூலம் தான் இந்த பிரச்சனைக்கான நிரந்தர விடிவை நாங்கள் காணமுடியும்.

அதற்கான ஒரு பாரிய அரசியல் நகர்வு ஒன்றை நாங்கள் இப்பொழுது மேற்கொண்டிருக்கிறோம். அனைத்து தமிழ் பேசும் அரசியல் தரப்புக்களும், தமிழ் தேசிய அரசியல் பரப்புகளில் இருக்கும், செயலாற்றுபவர்களும் ஒன்றிணைந்து ஒருமித்த நிலைப்பாட்டில் இந்த பதிமூன்றாவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபையை,  பலப்படுத்தி நிரந்தரமான அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான அரசியல் நகர்வினை மேற்கொண்டிருக்கிறோம்.

இந்த நகர்விலே இது அரசியல் தீர்வாக அல்ல. ஆனால், எங்களுடைய இனக்குடிப்பரம்பலை பேணுவதற்கு தற்போதைய கால சூழலில் அவசியமான ஒரு விடயமாக கருதியே இதை நாங்கள் நகர்த்தியிருக்கிறோம்.

இதில் இணைந்து கொள்ள அனைத்து தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகளையும் அழைத்திருக்கிறோம். எங்களுடைய இந்த நகர்வினை விமர்சித்து கொண்டு, இதில் பங்கு பெற்றாமல், தனித்து பாராளுமன்றத்திலே குரல் கொடுப்பதோ, இந்த போராட்டங்களினாலோ மாத்திரம், நிரந்தரமாக தடுத்து நிறுத்திவிட முடியாது.

ஆகவே எங்களுடைய அதிகார பலத்தை நாங்கள் பெற்று கொள்வதற்கும்  சர்வதேச ஆதரவினை கோருவதற்கும், இலங்கை அரசாங்கத்தினுடைய இந்த செயற்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குமான எங்களுடைய அரசியல் நகர்வு இப்பொழுது வெற்றிகரமாக, நாங்கள் முன்னெடுத்து இருக்கிறோம்.” என தெரிவித்தார்.

 

 

 

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 86 பேர் கைது!

Next Post

லிந்துலையில் தேவாலயமும், தபாலகமும் சேதம் – பெண் ஒருவர் கைது!

Related Posts

சட்டவிரோதமான முறையில் கால்நடைகளைக் கடத்த முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு
இலங்கை

சட்டவிரோதமான முறையில் கால்நடைகளைக் கடத்த முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

2026-01-25
கொழும்பு புறக்கோட்டை  பகுதியில் ஒரு கொலைச் சம்பவம்
இலங்கை

மகாவோயா – பெரகல வனப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-01-25
வீட்டின்  அறைக்குள்  சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட மைக்ரோ வகை கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
இலங்கை

வீட்டின் அறைக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட மைக்ரோ வகை கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-01-25
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்
இலங்கை

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்

2026-01-25
பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
இலங்கை

பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

2026-01-25
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!
இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
Next Post
லிந்துலையில் தேவாலயமும், தபாலகமும் சேதம் – பெண் ஒருவர் கைது!

லிந்துலையில் தேவாலயமும், தபாலகமும் சேதம் - பெண் ஒருவர் கைது!

சபையில் பசில் இல்லை… எதிர்க்கட்சியின் கேள்விக்கு மௌனம் காத்த செஹான் சேமசிங்க

சபையில் பசில் இல்லை... எதிர்க்கட்சியின் கேள்விக்கு மௌனம் காத்த செஹான் சேமசிங்க

பட்டிப்பளை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட அம்பிட்டிய சுமனரத்ன தேரர்!

பட்டிப்பளை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட அம்பிட்டிய சுமனரத்ன தேரர்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
சட்டவிரோதமான முறையில் கால்நடைகளைக் கடத்த முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

சட்டவிரோதமான முறையில் கால்நடைகளைக் கடத்த முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

0
கொழும்பு புறக்கோட்டை  பகுதியில் ஒரு கொலைச் சம்பவம்

மகாவோயா – பெரகல வனப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

0
வீட்டின்  அறைக்குள்  சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட மைக்ரோ வகை கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வீட்டின் அறைக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட மைக்ரோ வகை கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

0
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்

0
பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

0
சட்டவிரோதமான முறையில் கால்நடைகளைக் கடத்த முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

சட்டவிரோதமான முறையில் கால்நடைகளைக் கடத்த முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

2026-01-25
கொழும்பு புறக்கோட்டை  பகுதியில் ஒரு கொலைச் சம்பவம்

மகாவோயா – பெரகல வனப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-01-25
வீட்டின்  அறைக்குள்  சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட மைக்ரோ வகை கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வீட்டின் அறைக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட மைக்ரோ வகை கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-01-25
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்

2026-01-25
பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

2026-01-25

Recent News

சட்டவிரோதமான முறையில் கால்நடைகளைக் கடத்த முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

சட்டவிரோதமான முறையில் கால்நடைகளைக் கடத்த முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

2026-01-25
கொழும்பு புறக்கோட்டை  பகுதியில் ஒரு கொலைச் சம்பவம்

மகாவோயா – பெரகல வனப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-01-25
வீட்டின்  அறைக்குள்  சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட மைக்ரோ வகை கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வீட்டின் அறைக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட மைக்ரோ வகை கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-01-25
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்

2026-01-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.