40,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் இரண்டு நாட்களில் நாட்டை வந்தடையும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்தியக் கடனுதவியின் கீழ் குறித்த எரிபொருள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் போதுமான அளவு பெட்ரோல் கையிருப்பு இருப்பதாகவும் சுமித் விஜேசிங்க கூறியுள்ளார்.
எரிபொருளுக்கான புதிய விலை
92 ஒக்டேன் பெட்ரோல் – புதிய விலை: ரூ. 338/- (+84)
95 ஒக்டேன் (யூரோ 4) பெட்ரோல் – புதிய விலை: ரூ. 373/- (+90)
டீசல் – புதிய விலை: ரூ. 289/- (113)
லங்கா சுப்பர் டீசல் புதிய விலை: ரூ. 329/- (+75)
இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 35 ரூபாயாலும், டீசல் விலை 75 ரூபாயாலும் அதிகரிக்க லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்திருந்தது.
பெட்ரோல் (92 ஒக்டேன்) – ரூ. 338/-
பெட்ரோல் (95 ஒக்டேன்) – ரூ. 367/-
பெட்ரோல் யூரோ 3 – ரூ. 347/-
ஓட்டோ டீசல் – ரூ. 289/-
சூப்பர் டீசல் – ரூ. 327/-