• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
சீனாவிடமிருந்து விலகிவரும் இலங்கை இந்தியாவை நெருங்குகிறது!

இலங்கையை நெருக்கடிகளிலிருந்து மீட்கும் இந்தியா!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/04/30
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, சிறப்புக் கட்டுரைகள், பிரதான செய்திகள்
86 1
A A
0
39
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அரசாங்கம், பொருளாதார நெருக்கடி அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையால் மிகமோசமான நிலைமைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது.

காலிமுகத்திடலில் சுயாதீனமாக ஒன்றிணைந்த குழுவினர் ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டு மூன்றாவது வாரத்தினை கடந்து தொடர்ச்சியான போராட்டத்தினை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தத் தொடர்போராட்டத்திற்கு ஆதரவாக நாடாளவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்விதமான போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறையில் பொதுமகன் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

அதேநேரம், அனைத்து தொழிற்சங்கங்களும் வீதிக்கு இறங்கி பாரிய போராட்டங்களையும் ஹர்த்தாலையும் முன்னெடுத்துள்ளது. எதிர்வரும் நாட்களில் இந்தப்போராட்டங்கள் இன்னமும் தீவிரமடையாலம் என்றும் அத்தொழிற்சங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இவ்விதமான நிலையில் இலங்கை அரசாங்கம் தனது முன்னைய கொள்கையை மாற்றி சர்வதேச நாணய நிதியத்திடம் அவரச மற்றும் நீண்டகால உதவியை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதற்காக, இலங்கையிலிருந்து நிதியமைச்சர்  அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் எம் சிறிவர்தன ஆகியோர் சர்வதேச நாணயநிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா பிரதிப் பணிப்பாளர் கீதா கோபிநாத் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் துறைசார்ந்த நிபுணர்களும் கலந்து கொண்டிருந்தனர். இவர்கள் இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் நிதி உதவி வழங்குவதை உறுதி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கையானது சர்வதேச நாணய நிதியத்திடம், 4 பில்லியன் டொலர்களை கடன்களாக பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளது. எனினும், இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பு நாடாக இருப்பதால் அதற்கான கோட்டாவாக 800 மில்லியன் டொலர்கள் உள்ளன.

அதனை எப்போதும் இலங்கை கடன் உதவியாக பெற்றுக்கொள்ள முடியும்.  எனவே இலங்கை உடனடியாக கடனுதவியை சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிய நிலையில் அதற்கு சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் கோட்டாவில் அரைவாசியான 400 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதேநேரம், சர்வதேச நாணயநிதியத்தின் நிதியுதவி கிடைப்பதற்கு இலங்கை அரசாங்கம் மீளச் செலுத்தலுக்கான வரைபடமொன்றை தயாரிக்க வேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்கம் கடன்களை மீளச் செலுத்துவதை நிறுத்தியுள்ள நிலையில் இந்த வரைபடம் மிகவும் முக்கியமானதாகின்றது.

அத்துடன் கடன்கள் பற்றிய ஆலோசகர், சட்ட ஆலோசகர் உள்ளிட்ட முக்கிய பதவிகளையும் நியமிக்க வேண்டிய தேவையும் இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது. அந்தப் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இவ்வாறிருக்கையில், உலக வங்கி 300 மில்லியனில் இருந்து 600 மில்லியன் வரை இலங்கைக்கு உதவி வழங்குவதாக அறிவித்து இருக்கின்றது. அதேபோன்று ஆசிய அபிவிருத்தி வங்கியும் இலங்கைக்கு உதவுவதாக அறிவித்திருக்கிறது.

சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து நிதியுதவி கிடைக்கும் வரையிலும் ஏனைய தரப்புக்கள் நிதியை வழங்கும் வரையிலும் நாட்டின் பொருளாதார நிலைமைகளை சமாளிக்க வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளது.

தற்போதைய நிலையில் அரசாங்கத்துக்கு ஏற்கனவே இணங்கியதன் பிகாரம் இந்திய அரசாங்கம் அரிசி, எரிபொருள், மருந்து வகைகளை தொடர்ச்சியாக அனுப்பி வருகின்றது.

இம்மாதத்தில் மாத்திரம் தலா 27ஆயிரம் தொன் அரசி, எரிபொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. அத்துடன் உடனடித் தேவைக்கான மருந்துகளையும் அடுத்து வரும் நாட்களில் இலங்கைக்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன.

இந்நிலையில், உள்நாட்டு நிலைமைகளைச் சமாளிப்பதற்காக இலங்கை அரசாங்கம் சீனாவிடத்தில் நிதி உதவியைக் கோரியிருந்தது. குறிப்பாக 2.5 பில்லின் டொலர்களை சீனாவிடத்தில் கோரியிருந்தது.

அத்துடன் ஏற்கனவே பெறப்பட்ட கடன்களை மீளச் செலுத்துவதற்கான கால அவகாசத்தினை நீட்டிக்குமாறும் கோரியிருந்தது.

ஆனால், சீனா, தனது முன்னைய கடன்களை மீளச் செலுத்துவதற்கான கால அவகாசத்தினை வழங்குவதற்கு தயாரில்லை. ஆனால் புதிய கடன்களை வழங்குவதற்கு தயாராக உள்ளது.

குறிப்பாக தனது முன்னைய கடன்களை புதிய கடன்களை இலங்கைக்கு வழங்கு அதன் மூலம் தீர்க்குமாறு வலியுறுத்தியுள்ளது.

இதனால், இலங்கை அரசாங்கம் சீனாவிடத்தில் நிதியுதவியை எதிர்பார்க்கும் விடயத்தில் தடுமாறிப்போயுள்ளது. அதற்கான மாற்றுவழிகளைக் கண்டறிவதற்கு ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே இந்தியா பில்லியன் டெலர்கள் உதவிகளை வழங்கியுள்ளது. இந்நிலையில், தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவிகள் கிடைக்கும் வரையில் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காக நிதி அமைச்சா அலி சப்ரி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனிடத்தில் 2பில்லியன் டொலர்களை மேலதிக கடனாக கோரியுள்ளார்.

வொஷிங்கடனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா அதனை சாதகமாக பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது.

தற்போதைய தகவல்களின் பிரகாரம் ஒரு பில்லியன் டொலர்களை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம், இலங்கைக்கு இந்தியா வழங்கும் பன்முகப்படுத்தப்பட்டதும் தாராளமானதுமான ஆதரவு தொடர்வதாக அறிவித்துள்ள புதுடில்லி இலங்கை மத்திய வங்கிக்கான 400 மில்லியன் டொலர்கள் நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியினால் தற்போதைய நாணயம்சார் ஆதரவாக அக்காலஎல்லையை நீடித்துள்ளது.

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களும், நட்சத்திர வீரர்களுமான அர்ஜுண ரணதுங்க, சனத் ஜெயசூரிய போன்றவர்கள் ‘பெரியண்ணனாக இந்தியா இலங்கைக்கு உதவுகின்றது’ என்று ‘நன்றி உணர்வுடன்’ கூறியுள்ளார்கள்.

மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கரும், இலங்கை விடயத்தில் இந்தியா கரிசனையுடன் இருக்கின்றது. பிரதமர் மோடியின் அயலுறவுக் கொள்கைக்கு அமைவாக நலத்திட்ட உதவிகள் தொடரும்’ என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை ஓரளவேனும் தீர்ப்பதில் இந்தியாவின் உதவிகளும், பங்களிப்புக்களும் அபரீதமானவை. இந்தப் புரிதல் இப்போது அனைத்து இலங்கையர்களின் மத்தியிலும் வேரூன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-யே.பெனிற்லஸ்-

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இலங்கை வருகை!

Next Post

மக்கள் எழுச்சிப் போராட்டம் 22ஆவது நாளாகவும் தொடர்கிறது

Related Posts

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!
இலங்கை

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

2025-12-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!
இலங்கை

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!
இலங்கை

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!
இலங்கை

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!
இலங்கை

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2025-12-02
இந்திய கடற்படையின் மகத்தான உதவி!
ஆசிரியர் தெரிவு

பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள நாடுகளின் பட்டியல்!

2025-12-02
Next Post
மக்கள் எழுச்சிப் போராட்டம் 22ஆவது நாளாகவும் தொடர்கிறது

மக்கள் எழுச்சிப் போராட்டம் 22ஆவது நாளாகவும் தொடர்கிறது

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் 16 இந்திய மீனவர்கள் கைது!

தமிழகம் செல்ல முயன்ற திருகோணமலை வாசிகள் கே.கே.எஸ் கடற்பரப்பில் கைது!!

இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வருக்கு  நன்றி தெரிவித்தார் வடக்கு ஆளுநர்

இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் வடக்கு ஆளுநர்

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

0
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

0
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

0
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

0
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

0
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

2025-12-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

2025-12-02

Recent News

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

2025-12-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.