• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சபாநாயகரின் அறிவிப்பினால் பிரதி சபாநாயகர் தெரிவில் குழப்பம்!

சபாநாயகரின் அறிவிப்பினால் பிரதி சபாநாயகர் தெரிவில் குழப்பம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/05/05
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
93 1
A A
0
41
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அறிவிப்பு காரணமாக புதிய பிரதி சபாநாயகர் தெரிவில் குழப்பநிலை ஏற்பட்டிருந்ததுடன், அமைதியின்மையும் ஏற்பட்டிருந்தது.

இன்று காலை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியிருந்த நிலையில், கேள்வி நேரத்தினைத் தொடர்ந்து புதிய பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளமை குறித்த அறிவிப்பினை சபாநாயகர் வெளியிட்டார்.

இதன்போது கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்மொழியப்பட்டதுடன், சுசில் பிரேமஜயந்தவினால் வழிமொழியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அறிவித்திருந்தார்.

அதேநேரம், பிரதி சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார முன்மொழிந்திருந்த நிலையில், லக்ஷ்மன் கிரியெல்ல வழிமொழிந்திருந்தார்.

இதனையடுத்து, பிரதி சபாநாயகர் பதவிக்கு இரு வேட்புமனு தாக்கல் செய்தமையால் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சபாநாயகர் அறிவித்தார்.

குறிப்பாக வாக்களிக்கும் போது, வாக்களிக்கும் நபரின் பெயரை குறிப்பிட்டு வாக்குச்சீட்டில் தங்களது கையொப்பத்தினையிட வேண்டும் என சபாநாயகர் குறிப்பிட்டார்.

இதற்கு எதிர்கட்சியினர் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டனர். குறிப்பாக ஆளும் தரப்பிலுள்ள பலரும் தங்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும், இதனால் கையொப்பமிடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

எனினும், எதிர்கட்சியினரின் கோரிக்கையினை ஏற்றுக்கொள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மறுப்பு தெரிவித்தார். நாடாளுமன்ற வழமைக்கு மாறாக நடந்து கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர, கடந்த 2015ஆம் ஆண்டும் இவ்வாறே வாக்கெடுப்பு நடைபெற்றது என சுட்டிக்காட்டினார்.

இதன்காரணமாக சபையில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தமையினை அவதானிக்க முடிந்தது.

எது எவ்வாறு இருப்பினும் சபாநாயகர் முன்னர் அறிவித்ததன் பிரகாரமே புதிய பிரதி சபாநாயகரை தெரியும் வாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது.

இதேவேளை, ரஞ்சித் சியம்பலாபிட்டியவே இதற்கு முன்னரும் பிரதி சபாநாயகராக செயப்பட்டிருந்தார். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தமையினை தொடர்ந்து பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.

எனினும், தற்போது அவரது பெயர் மீண்டும் பிரதி சாபநாயகர் பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: குழப்பம்கேகாலைசபாநாயகர் மஹிந்த யாப்பாபிரதி சபாநாயகர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்தனர்

Next Post

பத்திரிகை கண்ணோட்டம் 05 05 2022

Related Posts

AI மோசடி விளம்பரங்கள் குறித்து மஹேல எச்சரிக்க‍ை!
இலங்கை

AI மோசடி விளம்பரங்கள் குறித்து மஹேல எச்சரிக்க‍ை!

2025-12-19
ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை; எடப்பாடியுடன்  தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு!
இலங்கை

ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை; எடப்பாடியுடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு!

2025-12-19
விமான விபத்தில் அமெரிக்க முன்னாள் கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் உயிரிழப்பு!
பிரதான செய்திகள்

விமான விபத்தில் அமெரிக்க முன்னாள் கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் உயிரிழப்பு!

2025-12-19
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-12-19
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2025-12-18
இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்
இலங்கை

இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

2025-12-18
Next Post
பத்திரிகை கண்ணோட்டம் 05 05  2022

பத்திரிகை கண்ணோட்டம் 05 05 2022

காணாமற்போனோரை கண்டறிவதே காணாமற்போனோர் அலுவலகத்தின் கடமை- எம்.ஏ.சுமந்திரன்

பிரதி சபாநாயகர் தெரிவு அரசாங்கத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறியவர்களின் நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளது - சுமந்திரன்!

நடப்பு ஆண்டின் 14ஆவது ஆயுத சோதனையை முன்னெடுத்தது வடகொரியா!

நடப்பு ஆண்டின் 14ஆவது ஆயுத சோதனையை முன்னெடுத்தது வடகொரியா!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
AI மோசடி விளம்பரங்கள் குறித்து மஹேல எச்சரிக்க‍ை!

AI மோசடி விளம்பரங்கள் குறித்து மஹேல எச்சரிக்க‍ை!

0
பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம்!

பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம்!

0
ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை; எடப்பாடியுடன்  தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு!

ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை; எடப்பாடியுடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு!

0
AI மோசடி விளம்பரங்கள் குறித்து மஹேல எச்சரிக்க‍ை!

AI மோசடி விளம்பரங்கள் குறித்து மஹேல எச்சரிக்க‍ை!

2025-12-19
பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம்!

பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம்!

2025-12-19
ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை; எடப்பாடியுடன்  தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு!

ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை; எடப்பாடியுடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு!

2025-12-19
விமான விபத்தில் அமெரிக்க முன்னாள் கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் உயிரிழப்பு!

விமான விபத்தில் அமெரிக்க முன்னாள் கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் உயிரிழப்பு!

2025-12-19
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-12-19

Recent News

AI மோசடி விளம்பரங்கள் குறித்து மஹேல எச்சரிக்க‍ை!

AI மோசடி விளம்பரங்கள் குறித்து மஹேல எச்சரிக்க‍ை!

2025-12-19
பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம்!

பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம்!

2025-12-19
ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை; எடப்பாடியுடன்  தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு!

ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை; எடப்பாடியுடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு!

2025-12-19
விமான விபத்தில் அமெரிக்க முன்னாள் கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் உயிரிழப்பு!

விமான விபத்தில் அமெரிக்க முன்னாள் கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் உயிரிழப்பு!

2025-12-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.