• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

எரிபொருளினை வழங்குமாறு கோரி நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/06/15
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
76 0
A A
0
எரிபொருளினை வழங்குமாறு கோரி நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள்
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

எரிபொருளினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம்(15) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனிடையே தமக்கான எரிபொருளை உரிய முறையில் பெற்றுத்தருமாறு கோரி யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியை சேர்ந்த விவசாயிகள் இன்று கையெழுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே தெமட்டகொட பகுதியில் எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டம் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் கொழும்பு பேஸ்லைன் வீதியில் இன்று முற்பகல் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எரிபொருளை உரிய முறையில் பெற்றுத்தருமாறு கோரி காலி வீதி தெஹிவலை பகுதியில் வீதியை மறித்தது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கொழும்பு – பஞ்சிகாவத்தை பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் குருணாகல், வவுனியா, மன்னார், பதுளை, ஹட்டன் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலும் எரிபொருள் கோரி மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையினை அவதானிக்க முடிந்தது.

இதனிடையே எரிபொருள் இன்மையால் ஹட்டனிலிருந்து காலி மற்றும் கொழும்பு நோக்கி செல்லும் பேருந்து சேவைகள் முறையாக முன்னெடுக்கப்படாமையினால் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, பொரலாந்த, கந்தபளை, மாகஸ்தோட்டம், நானுஒயா ஆகிய பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்புடன் பொதுமக்களுக்கு எரிவாயு விநியோகம் இடம் பெற்றிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, போதியளவு டீசல் இல்லாத பட்சத்தில் நாளை முதல் நாடளாவிய ரீதியில் தனியார் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டீசல் தட்டுப்பாடு காரணமாக மொத்த தனியார் பேருந்துகளில் 20 வீதமே இன்று சேவையில் ஈடுபட்டதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

தற்போதைய நிலைமை காரணமாக இலங்கை போக்குவரத்து சபை டிப்போவினால் தனியார் பேருந்துகளுக்கான டீசல் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கான விசேட பேருந்து சேவையை ஆரம்பிக்க மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை மாத்திரம் சாதாரண பேருந்து கட்டணத்தின் கீழ் ஏற்றிச் செல்வதற்காக தனியார் பேருந்துகளை பயன்படுத்தி இந்த விசேட பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Tags: அச்சுவேலிஆர்ப்பாட்டங்கள்யாழ்ப்பாணம்
Share13Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

எரிபொருள் நிரப்பு நிலைய குழப்பங்களுக்கு யாழ். மாவட்ட செயலகமே காரணம் – SLRCS குற்றச்சாட்டு!
இலங்கை

எரிபொருள் நிரப்பு நிலைய குழப்பங்களுக்கு யாழ். மாவட்ட செயலகமே காரணம் – SLRCS குற்றச்சாட்டு!

2022-07-05
இந்தியாவில் பரவும் ஒமிக்ரோனின் புதிய பிறழ்வு இலங்கையிலும் பரவுமா? – வைத்தியர் விளக்கம்
இலங்கை

இந்தியாவில் பரவும் ஒமிக்ரோனின் புதிய பிறழ்வு இலங்கையிலும் பரவுமா? – வைத்தியர் விளக்கம்

2022-07-05
மிரிஹான சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முக்கிய கோரிக்கை!
இலங்கை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கமல் குணரத்ன ஆஜர் !

2022-07-05
எனது வாயை மூட வர வேண்டாம் – பிரதமரின் அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டும்: சபாநாயகரிடம் சஜித்!
இலங்கை

எனது வாயை மூட வர வேண்டாம் – பிரதமரின் அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டும்: சபாநாயகரிடம் சஜித்!

2022-07-05
ஒரு சைக்கிள் 77,000 ரூபாய்: அதிக கேள்வியால் கையிருப்பும் தீர்ந்தது !
இலங்கை

ஒரு சைக்கிள் 77,000 ரூபாய்: அதிக கேள்வியால் கையிருப்பும் தீர்ந்தது !

2022-07-05
தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு
இலங்கை

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு!

2022-07-05
Next Post
நிபந்தனைகளுடன் இன்று முதல் எரிவாயு விநியோகத்திற்கு அனுமதி!

சமையல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

2022-06-20
நாட்டு மக்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிவிப்பு !

கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !

2022-06-18
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

2022-06-08

நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!

2022-06-17
அரிசியின் விலையும் அதிகரிக்கும் அபாயம்!

ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாய்?

2022-06-06
எரிபொருள் நிரப்பு நிலைய குழப்பங்களுக்கு யாழ். மாவட்ட செயலகமே காரணம் – SLRCS குற்றச்சாட்டு!

எரிபொருள் நிரப்பு நிலைய குழப்பங்களுக்கு யாழ். மாவட்ட செயலகமே காரணம் – SLRCS குற்றச்சாட்டு!

2022-07-05
இந்தியாவில் பரவும் ஒமிக்ரோனின் புதிய பிறழ்வு இலங்கையிலும் பரவுமா? – வைத்தியர் விளக்கம்

இந்தியாவில் பரவும் ஒமிக்ரோனின் புதிய பிறழ்வு இலங்கையிலும் பரவுமா? – வைத்தியர் விளக்கம்

2022-07-05
மிரிஹான சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முக்கிய கோரிக்கை!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கமல் குணரத்ன ஆஜர் !

2022-07-05
எனது வாயை மூட வர வேண்டாம் – பிரதமரின் அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டும்: சபாநாயகரிடம் சஜித்!

எனது வாயை மூட வர வேண்டாம் – பிரதமரின் அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டும்: சபாநாயகரிடம் சஜித்!

2022-07-05
ஒரு சைக்கிள் 77,000 ரூபாய்: அதிக கேள்வியால் கையிருப்பும் தீர்ந்தது !

ஒரு சைக்கிள் 77,000 ரூபாய்: அதிக கேள்வியால் கையிருப்பும் தீர்ந்தது !

2022-07-05

Recent News

எரிபொருள் நிரப்பு நிலைய குழப்பங்களுக்கு யாழ். மாவட்ட செயலகமே காரணம் – SLRCS குற்றச்சாட்டு!

எரிபொருள் நிரப்பு நிலைய குழப்பங்களுக்கு யாழ். மாவட்ட செயலகமே காரணம் – SLRCS குற்றச்சாட்டு!

2022-07-05
இந்தியாவில் பரவும் ஒமிக்ரோனின் புதிய பிறழ்வு இலங்கையிலும் பரவுமா? – வைத்தியர் விளக்கம்

இந்தியாவில் பரவும் ஒமிக்ரோனின் புதிய பிறழ்வு இலங்கையிலும் பரவுமா? – வைத்தியர் விளக்கம்

2022-07-05
மிரிஹான சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முக்கிய கோரிக்கை!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கமல் குணரத்ன ஆஜர் !

2022-07-05
எனது வாயை மூட வர வேண்டாம் – பிரதமரின் அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டும்: சபாநாயகரிடம் சஜித்!

எனது வாயை மூட வர வேண்டாம் – பிரதமரின் அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டும்: சபாநாயகரிடம் சஜித்!

2022-07-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.