• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடடர் ஓய்வு!

டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடடர் ஓய்வு!

Anoj by Anoj
2022/09/16
in கிரிக்கெட், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

டென்னிஸ் உலகின் ஜாம்பவான் ரோஜர் பெடரர், தொழில்முறை டென்னிஸ் அரங்கிலிருந்து ஓய்வுப் பெற போவதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் இரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருந்தாலும், அவரை ஆனந்தத்துடனும் கண்ணீருடனும் வழியனுப்பி வைத்துள்ளனர்.

சக வீரர்கள், பிற விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்கள் என பலரும் பெடடரின் ஓய்வுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

41 வயதான சுவிஸ்லாந்தின் பெடரர், வெகு விரைவில் தொடங்க உள்ள லேவர் கிண்ண டென்னிஸ் தொடருடன் ஓய்வுப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தனது ஓய்வறிக்கையில், ’24 ஆண்டுகளை 24 மணி நேரம் போல உணர்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

தனது டென்னிஸ் வாழ்க்கையில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றதுடன், 5 சீசன்களை உலகின் முதல்நிலை வீரராக நிறைவு செய்து அசத்தியவர் ரோஜர் பெடடர்.

அவரும், ரஃபேல் நடால் (ஸ்பெயின்), நோவக் ஜோகோவிச் (செர்பியா) ஆகியோரும் நடப்பு டென்னிஸ் காலகட்டத்தின் ‘மும்மூர்த்திகள்’ ஆக கருதப்படுபவர்கள். டென்னிஸ் விளையாட்டில் மதிப்பு மிக்கதான கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அதிக எண்ணிக்கையில் கைப்பற்றுவதில் இந்த மூவரிடையே பரபரப்பான போட்டி இருந்து வந்தது.

தற்போதைய நிலையில் நடால் 22 பட்டங்களுடன் முதலிடத்தில் இருக்க, ஜோகோவிச் 21 பட்டங்களுடன் அடுத்த இடத்திலும் பெடரர் 20 பட்டங்களுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

ஆனால், ஆண்கள் டென்னிஸ் உலகில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற சாதனை பெடரருக்குரியது.

கடந்த 1998ஆம் ஆண்டு வாக்கில் டென்னிஸ் உலகில் அறிமுகமான பெடரர், முதன்முதலில் சர்வதேச அளவிலான தொடரில் விளையாடியது அவரது தாய்நாட்டில்தான். அங்கிருந்து தொடங்கிய அவரது ஆதிக்கத்தை யாராலும் அணை போட்டு தடுக்க முடியவில்லை.

2003ஆம் ஆண்டு விம்பிள்டனில் சம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் பெடரர் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்றார்.

அதன் பிறகு அடுத்தடுத்து பல சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்தார். 6 அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ், 1 பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்;, 8 விம்பிள்டன் மற்றும் 5 அமெரிக்க பகிரங்க டென்னிஸ் என மொத்தம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

ஏடிபி மதீப்பிட்டு தரவரிசையில் சுமார் 310 வாரங்கள் முதலிடத்தில் இருந்தவர் பெடரர். அதில் தொடர்ச்சியாக 237 வாரங்கள் முதலிடத்தை தனக்கானதாக சீல் செய்தவர்.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மட்டுமே 20 முறை சம்பியன் பட்டங்கள் வென்ற பெடரர், விம்பிள்டன் அரங்கில் மட்டும் 8 முறை ஒற்றையர் ஆடவர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.

ஏடிபி டூர் நிலையில் பெடரர் 103 சம்பியன் பட்டங்கள், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 24 தொழில்முறை டென்னிஸில் களத்தில் ஆண்டுகள், டென்னிஸ் வாழ்க்கையில் மொத்த 1,251 வெற்றிகள் என மகத்தான சாதனைகள் அவருக்குரியது.

கடந்த 2018ஆம் ஆண்டு தனது 36 வயதில் உலகின் முதல் நிலையை எட்டி, ஏடிபி தரவரிசை வரலாற்றில் முதலிடத்துக்கு வந்த மிக வயதான வீரர் என்ற சாதனை படைத்தார்.

அதேபோல திறமையால் அவர் குவித்த சொத்துகளும் ஏராளம். ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டத்தைச் சேர்த்து டென்னிஸ் விளையாட்டின் மூலம் பெடரர் சம்பாதித்த பரிசுத் தொகை 130.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இந்த தொகையானது, சம்பியன் பட்டங்கள் வென்றதன் மூலம் மட்டுமே. இதுதவிர, வணிக ஒப்பந்தங்கள் மற்றும் விளம்பரம் மூலம் பெடரர் பெற்ற கூடுதல் வருமானங்கள் சேர்க்கப்படவில்லை.

என்றாலும், ஜோகோவிச், நடாலுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்திலேயே ஃபெடரர் உள்ளார். முதல் இடத்தில் 158.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஜோகோவிச்சும், இரண்டாம் இடத்தில் 131.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் நடாலும் உள்ளனர்.

இப்படியாக டென்னிஸ் உலகில் அவர் எட்டாத உயரங்களே இல்லை. இருந்தபோதும் காயங்கள் அவரை ரொம்பவே வருந்தச் செய்தன. பெடரர் தனது வலது முழங்கால் காயத்துக்காக மேற்கொண்ட அடுத்தடுத்த அறுவைச் சிகிச்சைகள் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக அவரால் பெரிதாக டென்னிஸில் பங்கேற்க முடியாமல் போனது.

அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பிரதான டென்னிஸ் தொடர்களில் விளையாடாமல் இருந்து வந்தார். இறுதியாக, கடந்த 2021 விம்பிள்டன் காலிறுதியில் தோற்ற பிறகு அவர் களம் காணவில்லை. இந்நிலையில்தான் இப்போது ஓய்வை அறிவித்துள்ளார்.

Related

Tags: கிராண்ட்ஸ்லாம்டென்னிஸ்தொழில்முறை டென்னிஸ்ரஃபேல் நடால்ரோஜர் பெடரர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாமல் தீர்மானம்?

Next Post

தியாகி திலீபனின் 35 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியில்!

Related Posts

2026 உலகக் கிண்ணத்துக்காக புதிய டிக்கெட்டை விலையை நிர்ணயித்த ஃபிஃபா!
உதைப்பந்தாட்டம்

2026 உலகக் கிண்ணத்துக்காக புதிய டிக்கெட்டை விலையை நிர்ணயித்த ஃபிஃபா!

2025-12-17
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு!
கிரிக்கெட்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு!

2025-12-17
வரலாற்றில் அதிக விலைக்கு விற்பனையான இலங்கை வீரர் –   சாதனை படைத்த  மதீஷ பத்திரன!
ஆசிரியர் தெரிவு

வரலாற்றில் அதிக விலைக்கு விற்பனையான இலங்கை வீரர் – சாதனை படைத்த மதீஷ பத்திரன!

2025-12-16
2026 ஐபிஎல் ஏலம்: 18 கோடி ரூபாவுக்கு ஏலம்போன பத்திரன!
கிரிக்கெட்

2026 ஐபிஎல் ஏலம்: 18 கோடி ரூபாவுக்கு ஏலம்போன பத்திரன!

2025-12-16
2026 ஐபிஎல் ஏலம்: 25.20 கோடி ரூபாவுக்கு ஏலம் போன கேமரூன் கிரீன்;
கிரிக்கெட்

2026 ஐபிஎல் ஏலம்: 25.20 கோடி ரூபாவுக்கு ஏலம் போன கேமரூன் கிரீன்;

2025-12-16
2026 IPL; உறுதி செய்யப்பட்ட போட்டித் திகதி!
கிரிக்கெட்

2026 IPL; உறுதி செய்யப்பட்ட போட்டித் திகதி!

2025-12-16
Next Post
தியாகி திலீபனின் 35 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியில்!

தியாகி திலீபனின் 35 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியில்!

ஏழாவது ரி-20 உலக்கிண்ண தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பம்?

ரி-20 உலகக்கிண்ணம்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்- சிம்பாப்வே அணிகள் அறிவிப்பு!

நுவரெலியாவில் வித்தியாசமான முறையில் கஞ்சா செடிகள் வளர்த்தவர் கைது!

நுவரெலியாவில் வித்தியாசமான முறையில் கஞ்சா செடிகள் வளர்த்தவர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

0
இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

0
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

0
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2025-12-18
இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

2025-12-18
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

2025-12-18
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

2025-12-18
கட்டாக்காலிகளால் பாரிய பாதிப்பை எதிர்கொள்ளும் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்கள்; விரைந்து கட்டுப்படுத்துமாறு பிரதேசசபைகளை வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி

கட்டாக்காலிகளால் பாரிய பாதிப்பை எதிர்கொள்ளும் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்கள்; விரைந்து கட்டுப்படுத்துமாறு பிரதேசசபைகளை வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி

2025-12-18

Recent News

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2025-12-18
இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

2025-12-18
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

2025-12-18
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

2025-12-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.