• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு தற்போதைய அரசாங்கம் காரணமில்லை – மைத்திரி

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தீர்ப்பானது எதிர்கால ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களிடத்தில் கூட தாக்கத்தை செலுத்தும் – மைத்திரி!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/01/17
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தீர்ப்பானது, நாட்டில் எதிர்க்காலத்தில் ஆட்சிக்கு வரவுள்ள ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களிடத்தில் கூட தாக்கத்தை செலுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தொடர்பாக கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் பேசப்படுகிறது.

2009 ஆம் ஆண்டுவரை இந்நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு ஜனாதிபதியின் காலத்திலும் நாட்டில் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன.

ஒரு நாளைக்கு குறைந்தது ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் அன்று உயிரிழந்தார்கள்.

ஆனால், நாம் அன்று நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகளை குற்றஞ்சாட்டவில்லை.

எனினும், இன்று அனைத்துத் தரப்பினரும் ஈஸ்டர் தாக்குதலை அடுத்து என்னை சிறைக்குள் தள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்.

2015, 2016, 2017 காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

இவ்வாறான நிலைமை எமது நாட்டுக்குள் வர, ஒருபோதும் இடமளிக்க வேண்டாம் என 2015 இலிருந்து, நான் பாதுகாப்புச் சபைக் கூட்டங்களின்போது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தேன்.

உரிய ஆலோசனைகளை வழங்கியிருந்தேன். பாதுகாப்புச் சபையானது அவசரகாலச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட ஒன்றாகும்.

யுத்தம் முடிவடைந்து இரண்டு – மூன்று வருடங்களிலேயே இது கலைக்கப்பட்ட நிலையில், நான் ஒரு சம்பிரதாயப்பூர்வமாகத் தான் இதனை தொடர்ச்சியாக கூட்டிவந்திருந்தேன்.

2010 – 2015 வரையான காலப்பகுதியில்கூட தேவைக்கேற்ப தான் பாதுகாப்புச்சபை கூட்டப்பட்டது. ஆனால் நான் தான் மாதத்திற்கு ஒருதடவை இதனைக் கூட்டினேன்.

2019, ஏப்ரல் 9ஆம் திகதிகூட, பாதுகாப்புச்சபை கூட்டப்பட்டபோது குற்றத்தடுப்புப் பிரிவின் பிரதானி, பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் வருகைத் தந்திருந்தார்கள்.

இதன்போது எந்தவொரு அதிகாரியும் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறும் என்று கிடைத்த புலனாய்வுத் தகவல் குறித்து எனக்கு தெரியப்படுத்தவில்லை.

ஆனால், நான் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறேன். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அதிகாரியொருவரால் ஏதேனும் தவறுகள் இழைக்கப்பட்டிருந்தால்தான், 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் உள்ளது.

இது நஷ்ட ஈடே ஒழிய, அபராதம் கிடையாது. ஆனால், இந்த நஷ்டஈட்டை வழங்கும் அளவிற்கு என்னிடம் சொத்துக்கள் கிடையாது.

எனினும், எனக்கு நெருக்கமானவர்களிடம் இந்தத் தொகையை பெற்று அந்த நஷ்டஈட்டை வழங்க தீர்மானித்துள்ளேன்.

இந்த வழக்கின் தீர்ப்பானது நாட்டில் எதிர்க்காலத்தில் வரவுள்ள ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களிடத்திலும் தாக்கம் செலுத்தும்.

அவர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தவறிழைத்தால்கூட, அவர்கள் இன்று எனது நிலைமைக்குத்தான் தள்ளப்படுவார்கள்.’ எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Maithripala Sirisenaஅமைச்சர்ஈஸ்டர்ஈஸ்டர் தாக்குதல்பிரதமர்மைத்திரிபால சிறிசேனஜனாதிபதி
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காதிருக்க தீர்மானம்?
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை எதிர்க்கவில்லை – சஜித்

2023-03-31
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கடுமையாக சாடினார் நீதி அமைச்சர் !
இலங்கை

ஜனாதிபதியும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் – விஜயதாச!

2023-03-31
நாடு திரும்புகிறார் பசில் – வரவு செலவுத் திட்டத்திற்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம்!
இலங்கை

ஜனாதிபதியின் அனைத்து தீர்மானங்களையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்க முடியாது – மொட்டு கட்சி

2023-03-30
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம்!
இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம்!

2023-03-30
மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்!
இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் சிறிய நிலநடுக்கம்

2023-03-30
நிதியமைச்சின் செயலாளருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
இலங்கை

நிதியமைச்சின் செயலாளருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

2023-03-30
Next Post
அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக 11ஆம் திகதிக்கு பின்னர் அனைத்து கட்சி கூட்டம் – ஜனாதிபதி உறுதி

அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதுதான் தற்போது பாரிய சவாலாக காணப்படுகிறது – ஜனாதிபதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

2023-03-06
பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

எரிபொருள் விலை குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு

2023-03-21
வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

2023-03-07

அரச ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் அதிகரிக்கப்படுகின்றது?

2023-03-27
நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாட அரசாங்கம் தீர்மானம்!

டொலரின் கொள்விலை மற்றும் விற்பனை விலைகளில் வீழ்ச்சி !

2023-03-21
அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காதிருக்க தீர்மானம்?

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை எதிர்க்கவில்லை – சஜித்

2023-03-31
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கடுமையாக சாடினார் நீதி அமைச்சர் !

ஜனாதிபதியும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் – விஜயதாச!

2023-03-31
எரிசக்தி செலவைக் குறைக்க அரசாங்கத்தால் புதிய திட்டம் அறிமுகம்!

எரிசக்தி செலவைக் குறைக்க அரசாங்கத்தால் புதிய திட்டம் அறிமுகம்!

2023-03-30
நாடு திரும்புகிறார் பசில் – வரவு செலவுத் திட்டத்திற்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம்!

ஜனாதிபதியின் அனைத்து தீர்மானங்களையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்க முடியாது – மொட்டு கட்சி

2023-03-30
மியாமி பகிரங்க டென்னிஸ்: சின்னர், சிர்ஸ்டியா- பெகுலா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

மியாமி பகிரங்க டென்னிஸ்: சின்னர், சிர்ஸ்டியா- பெகுலா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

2023-03-30

Recent News

அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காதிருக்க தீர்மானம்?

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை எதிர்க்கவில்லை – சஜித்

2023-03-31
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கடுமையாக சாடினார் நீதி அமைச்சர் !

ஜனாதிபதியும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் – விஜயதாச!

2023-03-31
எரிசக்தி செலவைக் குறைக்க அரசாங்கத்தால் புதிய திட்டம் அறிமுகம்!

எரிசக்தி செலவைக் குறைக்க அரசாங்கத்தால் புதிய திட்டம் அறிமுகம்!

2023-03-30
நாடு திரும்புகிறார் பசில் – வரவு செலவுத் திட்டத்திற்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம்!

ஜனாதிபதியின் அனைத்து தீர்மானங்களையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்க முடியாது – மொட்டு கட்சி

2023-03-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.