பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைய முயற்சித்த, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஹாமாகம பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தை, திறக்குமாறு வலியுறுத்தி, பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்குள், பலவந்தமாக நுழைய முயற்சித்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேர் நேற்று (வியாழக்கிழமை) கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















