இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்து சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த கவலை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில், இந்த துயரமான தருணத்தில் அயல் நாடு என்ற வகையில் இலங்கை அரசாங்கமும் மக்களும் ஆதரவாக நிற்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள ஜனாதிபதி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத விதமாக விபத்துக்கு முகம்கொடுத்துள்ள இந்திய அரசாங்கத்திற்கு வலிமையும் தைரியமும் கிட்ட வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதியின் விசேட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.