விபத்துகளில் சிக்குபவர்களில் பெரும்பான்மையானோர் 14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளே என சுகாதார அமைச்சகத்தின் தொற்றா நோய்கள் பிரிவு தெரிவிக்கிறது.
11வது தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது, தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி அலகப்பெரும இவ்வாறு தெரிவித்தார்.
வைத்தியர் ஸ்ரீனி அலகப்பெரும மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“இன்று நமது நாட்டின் மருத்துவமனைகளில் விபத்துகள் ஒரு முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஊனமுற்றோர் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையிலும் விபத்துகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கின்றன.
நாம் உற்பத்தி வயதுக் குழு என்று அழைக்கும் 15 முதல் 14 வயதுக்குட்பட்ட வயதினரே, விபத்துகளுக்கு மிகவும் ஆளாகி இறக்கின்றனர்.
இது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
விபத்துகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால், மொத்த மருத்துவமனை சேர்க்கைகளில் பத்தில் ஒரு பங்கு விபத்துகளால் ஏற்படுகிறது.
நமது மொத்த இறப்புகளில் 8% விபத்துகளால் நிகழ்கின்றன.” என தெரிவித்தார்.












