முதலாவது ரி-20 போட்டியில், இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு 161 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
தம்புள்ளை-ரன்கிரி மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 19 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக வனிந்து ஹசரங்க 67 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், பரூக்கி 3 விக்கெட்டுகளையும் நவீன் உல் ஹக் மற்றும் ஒமர் ஸாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கரீம் ஜெனட் மற்றும் நூர் அஹமட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 161 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இன்னமும் சற்று நேரத்தில், ஆப்கானிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.



















