ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதல் ரி-20 போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் இலங்கை கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
தம்புள்ளை-ரன்கிரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 19 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக வனிந்து ஹசரங்க 67 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், பரூக்கி 3 விக்கெட்டுகளையும் நவீன் உல் ஹக் மற்றும் ஒமர் ஸாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கரீம் ஜெனட் மற்றும் நூர் அஹமட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 161 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியால், 9 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், இலங்கை கிரிக்கெட் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, இப்ராஹிம் சத்ரான் 67 ஓட்டங்களையும், கரிம் ஜெனட் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மதீஷன பத்திரன 4 விக்கெட்டுகளையும் தசுன் சானக 2 விக்கெட்டுகளையும் அஞ்சலோ மத்தியூஸ், மகேஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 4 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்த மதீஷ பதிரன தெரிவு செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, எதிர்வரும் திங்கட்கிழமை (19) தம்புள்ளை-ரன்கிரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.