• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மீனவர்களுக்கு சிறை தண்டனை 5 அல்லது 10 வருடம் அதிகரிக்க வேண்டும்

மீனவர்களுக்கு சிறை தண்டனை 5 அல்லது 10 வருடம் அதிகரிக்க வேண்டும்

Kavipriya S by Kavipriya S
2024/02/24
in இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

எல்லை தாண்டி வரும் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் வடபகுதி கடற்தொழிலாளர்களும், கடற்தொழில் சங்கங்களும், கடற்தொழில் சமாசங்களும் உறுதியாக இருக்கின்றோம்.

மீண்டும் மீண்டும் எல்லை தாண்டி வருபவர்களுக்கு ஐந்து அல்லது பத்து வருட சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்றினை நடத்தி இருந்தோம். அந்தப் போராட்டத்தில் எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தோம். அத்துடன் இந்திய இழுவைப் படகு அத்துமீறி எல்லை தாண்டி வருகின்ற செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை இந்திய துணை தூதுவரிடம் நேரடியாக வலியுறுத்தி கூறியிருக்கின்றோம்.
இராமேஸ்வரத்தில் இந்திய மீனவர்கள் நியாயமற்ற போராட்டம் ஒன்றினை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். நமது கடல் எல்லை பரப்பிற்கு உள்ளே வந்து நமது வளங்களை களவாடி செல்கின்றவர்கள் இன்று நியாயமான போராட்டம் என்ற பேரிலே தமது களவுத் தொழிலையும், அத்துமீறிய அநியாயமான தொழிலையும் நிலை நிறுத்துவதற்காகவும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இதற்கு தென்னிந்திய அரசும் உடந்தையாக இருந்து ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த நிலை தொடருமானால் எமது வடபகுதி கடல் தொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்பட்டு நாங்கள் வறுமையில் சாக வேண்டிய ஒரு நிலை ஏற்படும்.
நாங்கள் பேசாமல் இருக்கும் வரை அவர்கள் எமது கடற் பகுதியை ஆக்கிரமித்து விடுவார்கள். அந்த வகையிலே இன்று ஒரு நிகழ்வு இந்தியா பகுதியில் போய்க்கொண்டிருக்கிறது. இந்திய தரப்பிலே ஒரு கருத்து வருகின்றது. தென்னிந்திய அரசும் அந்தப் பகுதியிலேயே இருக்கின்ற மீன்வளத்துறை அமைச்சும், அத்துமறி வருகின்ற மீனவர்களுடைய செயற்பாடு விடயமாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று.
நாங்கள் பல தடவை எமது அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் கோரிக்கைகள் விடுத்திருக்கின்றோம், கடிதங்கள் அனுப்பி இருக்கின்றோம், எச்சரிக்கைகள் விடுத்திருக்கின்றோம். ஆனால் எதற்குமே யாரும் மசிந்ததில்லை. இன்னும் இந்திய அரசாங்கம் தங்களுடைய அத்துமீறிய தொழிலை முடுக்கி விடுவது போல தான் எங்களுக்கு தெரிகின்றது.
அந்த வகையிலே இங்கே எமது கடற்பரப்பிலே களவாட வந்தவர்களை கைது செய்தது குற்றம், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். எக்காரணம் கொண்டும் அவர்கள் விடுதலை செய்யப்படக்கூடாது. அவர்கள் சட்டப்படி தான் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
எமது நாடு ஒரு இறைமை உள்ள நாடு. எமது இறைமையையும் சுதந்திரத்தையும் யாரும் பறித்தெடுக்க முடியாது. அந்த வகையிலே அத்துமீறி வந்து எமது வளங்களை களவாடியவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியானது. ஆனால் அந்தத் தண்டனை போதாது. தற்போது ஒருவருடம் தண்டனை வழங்கப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் வருவார்களானால் அவர்களுக்கு ஐந்து வருடங்கள் அல்லது 10 வருடங்களாவது சிறை தண்டை வழங்கினால் தான் இவர்கள் ஒரு நிலைப்பாட்டிற்கு வருவார்கள் என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கழிவு தேயிலை தூளை எடுத்து செல்ல தடை

Next Post

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காதது நல்லது : நிதி அமைச்சர் தெரிவிப்பு

Related Posts

ஜனாதிபதி – ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் இடையில் சந்திப்பு!
இலங்கை

ஜனாதிபதி – ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் இடையில் சந்திப்பு!

2025-06-14
யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட ஐவர் கைது! 
இலங்கை

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

2025-06-14
சிவனொளிபாதமலை செல்லும் பாதைகள் 10நாட்களுக்கு பூட்டு!
இலங்கை

சிவனொளிபாதமலை செல்லும் பாதைகள் 10நாட்களுக்கு பூட்டு!

2025-06-14
அதிகரிக்கவுள்ள மழை வீழ்ச்சி
இலங்கை

இன்றைய வானிலையின் முன்னறிவிப்பு!

2025-06-14
இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!
இலங்கை

அஸ்வெசும பணத்தை மோசடி செய்தவர் கைது!

2025-06-13
ஜனாதிபதிக்கும், ஜேர்மனியின் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு!
இலங்கை

ஜனாதிபதிக்கும், ஜேர்மனியின் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு!

2025-06-13
Next Post
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காதது நல்லது : நிதி அமைச்சர் தெரிவிப்பு

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காதது நல்லது : நிதி அமைச்சர் தெரிவிப்பு

மீண்டும் அரிசி விலை அதிகரிக்கும் வாய்ப்பு

மீண்டும் அரிசி விலை அதிகரிக்கும் வாய்ப்பு

வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளுக்கு தீர்வு !

தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை : ஜனாதிபதி ரணில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
ஜனாதிபதி – ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி – ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் இடையில் சந்திப்பு!

0
யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட ஐவர் கைது! 

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

0
ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் இஸ்ரேலின் எனவும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் !

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் இஸ்ரேலின் எனவும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் !

0
சிவனொளிபாதமலை செல்லும் பாதைகள் 10நாட்களுக்கு பூட்டு!

சிவனொளிபாதமலை செல்லும் பாதைகள் 10நாட்களுக்கு பூட்டு!

0
ஈரானில் கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதிலாக புதிய தளபதிகள் நியமனம்!

ஈரானில் கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதிலாக புதிய தளபதிகள் நியமனம்!

0
ஜனாதிபதி – ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி – ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் இடையில் சந்திப்பு!

2025-06-14
யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட ஐவர் கைது! 

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

2025-06-14
ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் இஸ்ரேலின் எனவும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் !

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் இஸ்ரேலின் எனவும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் !

2025-06-14
சிவனொளிபாதமலை செல்லும் பாதைகள் 10நாட்களுக்கு பூட்டு!

சிவனொளிபாதமலை செல்லும் பாதைகள் 10நாட்களுக்கு பூட்டு!

2025-06-14
ஈரானில் கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதிலாக புதிய தளபதிகள் நியமனம்!

ஈரானில் கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதிலாக புதிய தளபதிகள் நியமனம்!

2025-06-14

Recent News

ஜனாதிபதி – ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி – ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் இடையில் சந்திப்பு!

2025-06-14
யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட ஐவர் கைது! 

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

2025-06-14
ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் இஸ்ரேலின் எனவும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் !

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் இஸ்ரேலின் எனவும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் !

2025-06-14
சிவனொளிபாதமலை செல்லும் பாதைகள் 10நாட்களுக்கு பூட்டு!

சிவனொளிபாதமலை செல்லும் பாதைகள் 10நாட்களுக்கு பூட்டு!

2025-06-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.