• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
அதிகரித்துள்ள கார்ட்டூன், வீடீயோ கேம் மோகம் – உயிரைக்கொல்லும் அபாயம்

அதிகரித்துள்ள கார்ட்டூன், வீடீயோ கேம் மோகம் – உயிரைக்கொல்லும் அபாயம்

Kavipriya S by Kavipriya S
2024/08/02
in பிரதான செய்திகள், லைப் ஸ்டைல்
68 1
A A
0
49
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

இன்றைய நவீன காலத்தில்‌ மனிதர்களுக்கு கேடு விளைவிக்கின்ற ஏராளமான கண்டுபிடிப்புகள்‌ புதிதாக உருவாக்கப்படுகின்றன.

அதிலும்‌ குறிப்பாக ஏகாதிபத்திய மேலை நாட்டவர்களால்‌ தயார்‌ செய்யப்பட்டு, ஊடுருவ செய்கின்ற கார்ட்டூன்‌ சேனல்கள்‌, வீடியோ கேம்கள்‌, செல்‌போன்களில்‌ செயலிகள்‌ மூலமாக உருவாக்கப்படுகின்ற விளையாட்டு கேம்கள்‌ இதுபோன்ற பலதரப்பட்ட முறைகளின்‌ வாயிலாக பலதரப்பட்ட பாதிப்புகள்‌ உலக அரங்கில்‌ பரவுகின்றன.

இதுபோன்ற கேம்கள்‌, கார்ட்டுன்‌ சேனல்கள்‌ வெறுமனே பிள்ளைகளின்‌ பொழுதுபோக்கிற்காகத்தான்‌ உருவாக்கப்பட்டுள்ளது என்று நம்மில்‌ பலர்‌ நினைத்துக்‌ கொண்டு அதுபோன்ற காரியங்களை அனுமதித்து வருகின்றோம்‌.

ஆனால்‌ குழந்தைகள்‌, மாணவர்கள்‌, இளைஞர்கள்‌ இதுபோன்ற பருவத்தில்‌ உள்ளவர்களின்‌ வாழ்க்கையையும்‌, சிந்தனைத்‌ திறனையும்‌ அழித்தொழிக்கின்றது.

சமீப காலமாக மேலை நாட்டவர்களால்‌ செல்‌போன்‌ செயலிகள்‌ மூலமாக பதிவேற்றம்‌ செய்யப்பட்டு விளையாடக்‌ கூடிய நூற்றுக்கணக்கான விளையாட்டுக்களை உலகம்‌ முழுவதும்‌ பரப்பி வெளியிடுகின்றார்கள்‌.

ஆனால்‌ தயார்‌ செய்யப்பட்டு வெளியிடுகின்ற விளையாட்டுக்களின்‌ பாதிப்புகளையும்‌, கேடுகளையும்‌ அறியாமலும்‌, உணராமலும்‌ இருந்து வருகின்ற காரணத்தினால்‌, இவற்றில்‌ குறிப்பிட்ட சில விளையாட்டுக்கள்‌ உலக அரங்கிலே மிகவும்‌ பிரசித்தி பெற்ற விளையாட்டாகவும்‌, மக்களிடத்தில்‌ நல்ல வரவேற்பை பெற்ற விளையாட்டாகவும்‌ வலம்‌ வந்து கொண்டிருக்கின்றது.

உதாரணமாக, “ப்ளு வேல்‌” என்ற விளையாட்டு ஆரம்பத்தில்‌ மக்களிடத்தில்‌ மிகவும்‌ வேகமாக பரவினாலும்‌, குறிப்பிட்ட சில நாட்களில்‌ மனிதர்களின்‌ உயிருக்கே மிகப்பெரும்‌ ஆபத்தை விளைவிக்கின்ற விளையாட்டாக மாறி, உலக அரங்கில்‌ பலர்‌ செத்து மடிந்து, பெருமளவில்‌ பிரச்சனைகளை கிளப்பி, “ப்ளு வேல்‌” என்ற விளையாட்டு நாளடைவில்‌ தடை செய்யப்பட்ட விளையாட்டாக ஆனது.

ஆனால்‌ இந்த ப்ளு வேல்‌ விளையாட்டையெல்லாம்‌ பின் தள்ளி விட்டு உலக அரங்கில்‌ இளைஞர்களிடத்தில்‌ ஆக்கிரமித்திருக்கின்ற ஒரு உயிர்க்கொல்லி விளையாட்டு தான்‌ பப்ஜி.

இந்த விளையாட்டில்‌ அப்படி என்ன தான்‌ இருக்கின்றது? என்று கேட்டால்‌, பல நபர்கள்‌ கூட்டமாக சேர்ந்து ஒருவர்‌ மற்றவரை சுட்டுத்‌ தள்ளுகின்ற விளையாட்டு தான்‌ ஆனால்‌ மற்ற கேம்களை போலல்லாமல்‌ பப்ஜி சுவாரஸ்யமான விளையாட்டு என்று தெரிவிக்கின்றனர்.

ஒரே நேரத்தில்‌ பல நூறு பேர்‌ உலகின்‌ வெவ்வேறு இடங்களில்‌ இருந்துகொண்டே இயர்போன்‌ வழியாக ஒருவரை ஒருவர்‌ தொடர்பு கொண்டு ஆன்லைன்‌ வழியாக விளையாடும்‌ விளையாட்டு பப்ஜியாகும்‌.

சிலர்‌ ஆர்வக்‌ கோளாறின்‌ உச்சகட்டத்திற்கு சென்று, படிப்பதை மறந்து விட்டு மணிக்கணக்கில்‌ பப்ஜி விளையாட்டில்‌ மூழ்கி திளைக்கின்றனர்‌.

சிலர் போனில்‌ சார்ஜ்‌ தீர்ந்து போனாலும்‌, கைகளிலே பவர்‌ பேங்க்‌ உடனோ அல்லது சார்ஜ்‌ ஏற்றியவாறே விளையாடி பப்ஜி போதையில்‌ மூழ்கி விடுகின்றனர்‌.

மேலும்‌ நாளுக்கு நாள்‌ பப்ஜி விளையாட்டின்‌ மோகம்‌ அதிகரித்து பெருமளவிலான மக்கள்‌ பப்ஜி கேமை விளையாடுவதாகவும்‌ ஆய்வறிக்கைகள்‌ தெரிவிக்கின்றன.

சுமார்‌ 30 கோடி பேர்‌ பப்ஜி விளையாட்டைப்‌ பதிவிறக்கம்‌ செய்துள்ளதாகவும்‌, ஒரே நேரத்தில்‌ உலகளவில்‌ சுமார்‌ 5 கோடி பேர்‌ விளையாடி வருவதாகவும்‌ புள்ளி விவரங்கள்‌ தெரிவிக்கின்றன.

இத்தகைய விளையாட்டுக்கள்‌ அதிகமானளவில்‌ பிள்ளைகள்‌ மத்தியில்‌ உலா வந்துக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறு வயதில்‌ பிள்ளைகளின்‌ மனமானது முறையாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தால்‌ தான்‌ அவர்களின்‌ எதிர்கால கற்றல்‌ செயற்பாடுகள்‌ சிறப்பாக அமையும்‌ எனலாம்‌.

பிரதிகூலங்கள்‌

  • தனித்துவிடப்படுகின்ற நிலை உருவாகும்‌.
  • உடல்‌ உள விருத்தி பாதிப்படையும்‌
  • மன அழுத்தம்‌ ஏற்படும்‌
  • தூக்கமின்மை
  • முரண்பாடுகள்‌ ஏற்படல்‌
  • விரோதம்‌ போன்ற குணங்கள்‌ மனதளில்‌ உருவாதல்‌
  • கல்வியின்‌ மீது ஈடுபாடின்மை

இத்தகைய நிலைப்பாடுகள்‌ பிள்ளைகள்‌ மத்தியில்‌ ஏற்பட பிரதான காரணமாக இருப்பதே பெற்றோர்கள்‌ என்றால்‌ அது மிகையல்ல. அந்த வகையில்‌ பிள்ளைகளை சிறுவயதில்‌ இருந்தே அவர்களுக்கு விருப்பமான விளையாட்டுக்களின்‌ ஊடான கல்வி செயற்பாடுகளில்‌ ஈடுபட வழிவகுத்து தர வேண்டும்‌.

அதனால்‌ அவர்களை ஈர்க்கும்‌ வகையில்‌ அமைந்த முன்பள்ளி செயற்றிட்டங்கள்‌ ஒழுங்கமைக்கப்பட வேண்டும்‌. குழந்தைகள்‌ ஏன்‌ பாடசாலைக்கு செல்ல விரும்புவதில்லை என சிந்திக்க வேண்டும்‌ பள்ளிகள்‌ குழந்தைகளை என்ன செய்கின்றன என யோசிக்க வேண்டும்‌.

குழந்தைகள்‌ மகிழ்ச்சியாக வந்து போக கூடிய இடமாக ஆரம்பக்‌ கல்வியை மாற்ற வேண்டும்‌.

அதனை செயற்படுத்தி காட்டியவரே மரியா மாண்ட்டிசோரி ஆவார்‌ நாம்‌ மாண்ட்டிசோரி அல்லது நெர்ஸரி என்று அழைக்கும்‌ இந்த ஆரம்பக்‌ கல்வியை பாலர்‌ கல்வி என்று விளக்கலாம்‌.

இதில்‌ கல்வி முதன்மையாக இல்லை என்றாலும்‌ கூட ஏதோ ஒன்றை தாம்‌ விரும்பிய முறையில்‌ கற்றுக்கொள்கிறோம்‌ என்பதால்‌ பாலர்‌ கல்வி பிள்ளைகளை உருவாக்குவதில்‌ பிரதான இடம்‌ வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீனாவின், ஹெங்யாங் பகுதியில் நிலச்சரிவு : 30 பேர் உயிரிழப்பு

Next Post

அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றம்

Related Posts

UPDATE : வெளியேறினார் நாமல்
இலங்கை

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
கொழும்பு – வார்சா இடையிலான சேவையை ஆரம்பிக்கும் ஸ்மார்ட்விங்ஸ் நிறுவனம்!
இலங்கை

கொழும்பு – வார்சா இடையிலான சேவையை ஆரம்பிக்கும் ஸ்மார்ட்விங்ஸ் நிறுவனம்!

2026-09-14
ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!
உலகம்

ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!

2026-09-14
உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!
பிரதான செய்திகள்

உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!

2026-09-14
ஐநா கூட்டத்துொடர் காலத்தில் கைது செய்யப்பட்ட நாமல்! நிலாந்தன்!
இலங்கை

ஐநா கூட்டத்துொடர் காலத்தில் கைது செய்யப்பட்ட நாமல்! நிலாந்தன்!

2026-09-13
அமைச்சர் விஜித ஹேரத் தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம்
இலங்கை

அமைச்சர் விஜித ஹேரத் தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம்

2026-09-13
Next Post
அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றம்

அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றம்

வெலிகந்த – சிங்கபுர பகுதியில் விபத்து-30 பேர் காயம்!

நுவரெலியாவில், தனியார் பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து : 6 பேர் காயம்

காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

பேருந்து முதல் டிப்பர் வரை – சாரதிகளுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

0
சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!

சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!

0
விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

0
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

களுபோவில அவிஷ்கவின் போதைப்பொருள் வலையமைப்பு நடத்துனர் கைது!

0
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!

கூர்மையான ஆயுதங்களினால் தாக்கப்பட்ட சம்பவங்களில் இருவர் உயிரிழப்பு!

0
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

பேருந்து முதல் டிப்பர் வரை – சாரதிகளுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

2026-09-15
சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!

சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!

2026-09-15
விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

2026-09-15
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

களுபோவில அவிஷ்கவின் போதைப்பொருள் வலையமைப்பு நடத்துனர் கைது!

2026-09-15
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!

கூர்மையான ஆயுதங்களினால் தாக்கப்பட்ட சம்பவங்களில் இருவர் உயிரிழப்பு!

2026-09-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.