எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு பொதுஜன பெரமுனவின் நூற்றுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
”ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதற்கு நாம் கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாகவே தீர்மானம் மேற்கொண்டோம்.ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கியது புதிய விடயமல்ல.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் சுயாதீன வேட்பாளராக முன்னிலையாவதாக ஜனாதிபதி அறிவித்தார். தற்போதைய நிலையில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் பொதுஜன பெரமுனவின் பதவி நிலைகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுஜன பெரமுன கட்சி இன்று பல வகைகளிலும் பிளவுபட்டுள்ளது.
கட்சியில் மேற்கொள்ளப்படும் ஒரு சில தீர்மானங்களினாலேயே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி 149 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர்.
ஆனால் தற்போது 24க்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களே கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர். எதிர்வரும் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு காணப்படுகின்றது.
பொதுஜன பெரமுனவில் இருந்து கடந்த வாரம் 92 பேர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்திருற்த நிலையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.
அமைச்சு பதவி வகிப்பவர்களும் இதில் உள்ளடங்கியுள்ளனர்” என அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தொிவித்தாா்.
















